புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2013

ஸ்டெர்லைட் வழக்கு : வைகோ மேல்முறையீடு-  சுப்ரீம் கோர்ட் முடிவு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து போராடி வருகிறார். அவர் தொடுத்த ரிட் மனு மீது, விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட், 2010 செப்டம்பர் 28-ல்
ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தீர்ப்பு வழங்கியது.


அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்று ஆலையை இயக்கியது. இந்த வழக்கின் முடிவில், சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ரத்துச் செய்து, ஆலையை இயக்கலாம் என தீர்ப்பு அளித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த மறு ஆய்வு மனு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் மார்ச் 31-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடிட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம், சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மேல் முறையீடு செய்தது. அந்தத் தீர்ப்பாயத்தில் வைகோவும், மனு தாக்கல் செய்து, வாதங்களை முன்வைத்தார். ஆனால், ஸ்டெர்லைட் வழக்கு, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வுக்கு மாற்றப்பட்டது.
டெல்லித் தீர்ப்பாயத்திலும் வைகோ தொடர்ந்து பங்கேற்று, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வாதங்களை எழுப்பினார். பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று, ஆணை பிறப்பித்தது. அந்த ஆணையை எதிர்த்து, டெல்லி உச்சநீதிமன்றத்தில் வைகோ இரண்டு மேல் முறையீடுகளைத் தாக்கல் செய்தார். இதேபோல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள், ஏ.கே. பட்நாயக், சுரேந்திரசிங் நிஜார், முகமது இப்றாகிம் கலிஃபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ, தன்னுடைய மேல் முறையீடு களை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்துள்ள மேல் முறையீடுகளோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதன்படி விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

ad

ad