வைத்தீஸ்வர குருக்கள் 100வது வயதில் சிவபதம்
பிரம்மஸ்ரீ குகானந்த சர்மா அனுதாபம்
காரைநகர் ஈழத்து சிதம்பரம் குரு பரம்பரையைச் சேர்ந்த கலாநிதி பண்டிதர் பிரம்மஸ்ரீ கா. வைத்தீஸ்வர குருக்கள் நேற்று (ஏப்ரல் 25ம் திகதி) அதிகாலை 3 மணியளவில் தனது நூறாவது வயதில் சிவபதம் எய்தினார்.
இவரது ஈமக்கிரியைகள் நேற்றுப் பகல் கந்தரோடை மயானத்தில் நடைபெற்றது.