மஹிந்தவின் கோட்டையில் மைத்திரி
இம்மாநாட்டில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர்
நிமால் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஏ.எச்.எம்.பெளசி, நிருபமா ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, வீ.கே.இந்திக, கமலா ரணதுங்க ஆகியோரும், அம்பாந்தோட்டை மாவட்ட மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
அம்பாந்தோட்டை மாவட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறப்பிடமாகவும், அரசியல் கோட்டையாகவும் திகழ்கின்றது.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின்னர் நடை பெறுகின்ற அம்பாந்தோட்டை பிரதிநிதிகளின் முதலாவது மாநாடு இதுவென்பதோடு மஹிந்தவின் கோட்டையில் மைத்திரி தலைமையேற்று மாநாட்டை நடத்தியிருப்பது மஹிந்தவிற்கு விடுத்திருக்கும் சவாலாக இது அமைந் துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.