புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015


காதலிக்க மறுத்த 9–ம் வகுப்பு மாணவி தீவைத்து கொலை

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மந்தவெளி, அம்பேத்கார் நகர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் விஜயலட்சுமி(வயது-17). இவர் ஆத்தூர் அரசு மகளீர் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 19–ந்தேதியன்று மாலை மாணவி விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அவரது உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியுள்ளார்.

அந்த சமயத்தில் வீட்டுக்குள் இருந்து அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கார்த்தி என்பவர் ஓடியதாக கூறப்படுகிறது. உடனே, பக்கத்து வீட்டுக்காரர்கள்  மற்றும் உறவினர்கள் அவரது உடலில் எரிந்த நெருப்பை அனைத்து, அவரை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விஜயலட்சுமியின் உடலில் பலமான நெருப்பு காயம் இருந்ததால், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உயர் மருத்துவ சிகிச்சைக்காக  அவரை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைபிரிவில்  வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாணவி விஜயலட்சுமி இறப்பதற்கு முன் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தனது வீட்டுக்கு அருகிலுள்ள வாலிபர் கார்த்தி என்பவர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தன்னுடைய வீட்டுக்கு வந்ததாகவும். அப்போது, கார்த்தி தன்னை காதலிக்குமாறு கூறி வற்புறுத்தியதாகவும். அதற்கு மாணவி விஜயலட்சுமி, உன்னுடைய பழக்க வழக்கங்கள் சரியில்லை. எனவே உன்னை நான் காதலிக்க முடியாது எனக் கூறியதாகவும் ஆனால், கார்த்தி அதை ஏற்காமல் நீ என்னை காதலித்தே ஆகவேண்டும் என தொல்லை செய்ததாகவும், 

இதைத்தொடர்ந்து, இன்னும் என்னை தொல்லை செய்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என கூறிய நான் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் உதறிக்கொண்டு மிரட்டியதாகவும்,  அப்போது, கார்த்தி உடனே என்னை காதலிக்காத நீ இருந்தால் என்ன போனால் என்ன என்று கூறி மாணவி விஜயலட்சுமி மண்ணெண்ணெய் பட்டு உடலில் நனைந்திருந்த துணியில் தீ வைத்து கொளுத்தி விட்டு ஓடி விட்டதாகவும் கூறியிருந்தார்.

மாணவி கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரிலும் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் கார்த்தியை கைது செய்து, சேலம் நடுவன் சிறையில் சிறையில் அடைத்துள்ளனர்

ad

ad