புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2015

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : ஆசிரியர் கூட்டணி நன்றி



அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி வழங்கியை தொடர்ந்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 6 சதவீத அகவிலைப் படியை உயர்த்தி வழங்கியுள்ளது. இதையொட்டி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் 6-வது ஊதியக் குழுவின் குறைபாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியமும், படியும்  வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ad

ad