வலுவான நிலையில் இலங்கை அணி
இலங்கை - பாகிஸ்தான் அணிக்கிடையியே இடம்பெறும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை அணி 2வது நாள் ஆட்டத்தை நேற்று 5 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்கள் பெற்றிருந்த போது தொடர்ந்தது. அணித் தலைவர் மெத்திவ்சுடன் இணைந்து ஆடிய விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தன 35 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார்.