இலங்கை சிறையில் இருந்து மேலும் 20 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை! இதுவரை 183 மீனவர்கள் விடுதலை
நேற்று திங்கட்கிழமை மட்டும் 163 தமிழக மீனவர்களை இலங்கைச் சிறைகளிலிருந்து விடுதலை செய்துள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 20 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கோடியக்கரை அருகே கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 111 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல் காரைக்காலைச் சேர்ந்த 32 மீனவர்களும், புதுக்கோட்டை மீனவர்கள் 20 பேரும் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.
மேலும் டெல்லி சென்ற மீனவ சங்க பிரதிநிதிகள் - பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் ஆகியோரை சந்தித்தும் கோரிக்கை மனு அளித்தனர்.
இருப்பினும், அவர்களை விடுதலை செய்யாத இலங்கை நீதிமன்றம், காவலை அடுத்தடுத்து நீட்டித்தது.
பின்னர் பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவ பிரதிநிதிகளும் சென்னையில் 20-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.
இந்த சூழ்நிலையில், திருகோணமலை சிறையில் வாடும் நாகை மாவட்ட மீனவர்கள் 111 பேரை விடுதலை செயயுமாறு திருகோணமலை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்களும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
இதன்மூலம் நேற்று மட்டும் 163 மீனவர்கள் விடுதலை செய்த நிலையில், மேலும் 20 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள 183 தமிழக மீனவர்கள் அனைவரும் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் அவர்கள் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல் காரைக்காலைச் சேர்ந்த 32 மீனவர்களும், புதுக்கோட்டை மீனவர்கள் 20 பேரும் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.
மேலும் டெல்லி சென்ற மீனவ சங்க பிரதிநிதிகள் - பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் ஆகியோரை சந்தித்தும் கோரிக்கை மனு அளித்தனர்.
இருப்பினும், அவர்களை விடுதலை செய்யாத இலங்கை நீதிமன்றம், காவலை அடுத்தடுத்து நீட்டித்தது.
பின்னர் பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவ பிரதிநிதிகளும் சென்னையில் 20-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.
இந்த சூழ்நிலையில், திருகோணமலை சிறையில் வாடும் நாகை மாவட்ட மீனவர்கள் 111 பேரை விடுதலை செயயுமாறு திருகோணமலை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்களும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
இதன்மூலம் நேற்று மட்டும் 163 மீனவர்கள் விடுதலை செய்த நிலையில், மேலும் 20 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள 183 தமிழக மீனவர்கள் அனைவரும் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.