புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2014

தமிழக மீனவர்கள 163 பேர் இன்று ஒரே நாளில் விடுதலை! - இலங்கை மீனவர்கள் 20 பேர் விடுதலை

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 163 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 20 பேரையும் சிறைபிடித்துச் சென்றனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 மீனவர்களின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து 20 பேரையும் மீண்டும் மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 20 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து திருகோணமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேர்களும், காரைக்கால் மீனவர்கள் 32 பேரும் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
அவர்கள் 143 பேரையும்  விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்களில் நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் 111 பேரும் டிசம்பர் 11 ம் தேதியன்றும், காரைக்கால் மீனவர்கள் 32 பேரும் அக்டோபர் 16ம் தேதியன்றும் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புழல் சிறையில் உள்ள 20 இலங்கை மீனவர்கள் விடுதலை
மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் வரும் 20-ம் தேதி தமிழக-இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 163 மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள மகாபோதிக்கு வந்து அங்கிருந்து இலங்கை புறப்படுகின்றனர்.
நல்லெண்ண அடிப்படையில் தமிழக அரசும் இலங்கை மீனவர்களை விடுதலை செய்திருப்பதன் மூலம் மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தையும் சுமுகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad