கூண்டோடு இடமாற்றம்:ஜனாதிபதி பணிப்பின் பேரிலேயே?
வடக்கில் பணியாற்றும் 300 தமிழ்ப் பொலிசாரையும் ஒரே நாளில் இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கின் யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி ,வவுனியா ,முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் தற்போது 300 தமிழ்ப் பொலிசார் பணியாற்றுகின்றனர்.
இதில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை அத்தியட்சகரின் கீழ் 150 தமிழ்ப் பொலிசாரும் ஏனைய 4 பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளின் கீழ் 150 தமிழ்ப் பொலிசாரும் பணியாற்றிய நிலையில் யாழில் பணியாற்றிய பொலிசார் வெளி மாவட்டங்களிற்கும் வெளி மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.