உள்ளளூராட்சி தேர்தல் மற்றும் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களும், அந்தக் கட்சி எடுத்திருந்த நிலைப்பாட்டையும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்துக்களையும் அவர் வரவேற்றுள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உள்ளூராட்சி தேர்தல் உட்பட நடை முறையில் உள்ள தேர்தல் முறை மாற்றப்படுவது இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மிகவும் முக் கியமான விவகாரமாகும். முழுமையான விகிதாசார முறைமை மாற்றப்பட்டு தொகுதி மற்றும் விகிதா சார முறைமைகள் கலந்த கலப்பு முறைமை நடைமுறை ஆக்கப்படுவதற் கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை தவிர்த்து எதிர்காலத்தில் நடைபெறப் போகும் அனைத்து உள்ளூராட்சி, மாகாண சபை பாராளுமன்ற தேர்தல்கள் புதிய முறைமையின் கீழ் நடை பெறவிருக்கின்றன.
இச்சட்ட மூலங்களில் பிரேரிக்கப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் வட கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களை விட, வடக்கு கிழக்கிற்கு வெளியே பெரும்பான் மையினர் மத்தியிலே சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை மிக அதிகமாக பாதிக்கப் போகின்றன. இந்நிலையில் வடகிழக்கிற்கு வெளியே செயற்படும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும், மக்கள்பிரதிநிதிகளும் இச்சட்ட மூலம் தொடர் பிலே நியாயமான அக்கறையை வெளிக் காட்டாதது கவலைக்குரியதாகும். பாராளு மன்றத்திற்கு வந்து சபையிலே இச்சட்ட மூலத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தங்கள் எமது மக்களை எந்த அளவிற்கு பாதிக்கப் போகின்றன என்பது பற்றிய எமது கருத்துக் கள் மக்கள் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட் டிருக்க வேண்டும்.
அத்துடன் இச்சட்ட மூலத்தில் உள்ளடக் கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாற்று யோசனைகள் எடுத்துவைக்கப்பட்டிருக்க வேண்டும். சபை ஏற்றுக்கொள்கிறதோ, இல்லையோ நமது கருத்துக்கள் ஹன் சாட்டிலே பதிவாக வேண்டும். ஆனால் இவற் றை வட கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யத் தவறியுள்ளார்கள்.
இந்நிலையில் வடகிழக்கிலே வாழ் கின்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ப துடன் வடகிழக்கிற்கு வெளியே சிறுபான் மையாக வாழும் தமிழ் மக்களின் நலன் களையும் பிரதிநிதித்துவம் செய்யும் முக மாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம் பந்தன் அவர்களின் நிலைப்பாடு அமைந் துள்ளது. அதேபோல் ஆளும் தரப்பிலே இடம்பெற்றிருந்தாலும் கூட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரவூப் ஹக்கீம் இச்சட்ட மூலம் தொடர்பிலே ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தமிழ் பேசும் மக்கள் தலைவர்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் என்ற முறையில் பாராட்டுவதற்கு கடமைப்பட்டுள்ளேன் என்றார்