நடிகை சுஜாதா உடலுக்கு நடிகர்-நடிகைகள் அஞ்சலி
1974-ல் “அவள் ஒரு தொடர்கதை” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சுஜாதா. இப்படத்தில் வரும் தெய்வம் தந்த வீடு வீதி இருக்க என்ற பாடல் இப்போதும் மிகப்பிரபலம்.
கடல் மீன்கள் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக “அந்தமான் காதலி” படத்தில் நடித்துள்ளார். ”ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது”, “மயங்குகிறாள் ஒரு மாது”, “அமைதிப்படை”, “விதி”உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், தெலுங்கு, படங்களிலும் நடித்துள்ளார். சுஜாதாவின் கணவர் பெயர் ஜெயகர். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
சென்னையில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று பிற் பகல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.
சுஜாதா உடல் சென்னை நீலாங்கரை பீச்ரோட்டில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நடிகர்-நடிகைகள் பலர் இன்று காலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகர்கள் கமலஹாசன், சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை லட்சுமி, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக