புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2017

இலங்கை ஐ.நா மனித உரிமை சபையின் நம்பகத் தன்மைக்கு சவால் விடுக்கின்றது. ஐ.நா மனித உரிமை சபை உறுதியாகப் பதிலிறுப்பது அவசியம்

இலங்கையின் அனுசரணையுடன் ஐ. நா மனித உரிமை சபையின்  2015 அக்டோபரில்நறைவேற்றப்பட்ட 30/1  தீர்மானமானது, மனித உரிமைகள் அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட ஒருநாட்டுடன் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் சபை எவ்வாறு ஆக்கபூர்வமாக தொழிற்படுவதுஎன்பதற்கு உதாரணமாக அமையக் கூடியது என அந்நேரத்தில் பரவலாகக்கருத்துரைக்கப்பட்டது. 

ஆனால், இலங்கை அரசை, இப் பிரேரணையின் இணை அனுசரணையாளர் எனும் தளத்திற்கு கொண்டு வருவதற்காக, பிரேரணையின் உள்ளடக்கத்தில், உறுதியான பன்னாட்டு நியமங்களுக்கமைவான பொறுப்புக்கூறல், மற்றும்  நீதிப்பொறிமுறைகளுக்கான அடித்தளமொன்றை இடுவதற்கான சந்தர்ப்பத்தை இழந்து,தெளிவற்ற வாசகங்களுடன் கூடிய கலப்பு நீதிப்பொறிமுறை ஒன்றிற்கு விட்டுக்கொடுப்பு செய்யப்பட்டு 30/1  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் கட்டமைப்புகள்,உண்மையைக் கண்டறிந்து நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பைக் கொண்டிராதமையால், இலங்கை அரசின் உள்ளக நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் அமைகின்ற எந்தவொரு கலப்பு பொறிமுறையும் எமக்கான நீதியைப் பெற்றுத் தராது என நாம்அப்போதே குறிப்பிட்டிருந்தோம். குறிப்பாக, ஐ.நா மனித உரிமை சபையின் 30/1  தீர்மானம்  நிறைவேற்றப்பட்ட பின்பு இலங்கை நீதித்துறையால் வழங்கப்பட்ட குமாரபுரம் மற்றும் அமரர் ரவிராஜ் வழக்குகளின் தீர்ப்புகள், இலங்கை நீதித்துறையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில், குற்றவாளிகள்  தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழமையை உறுதிப்படுத்துகின்றன.

அத்தோடு, உண்மையான பொறுப்புக் கூறலில் அரசியல் விருப்பில்லாத இலங்கையின் கட்டமைப்புகளுள், சில வெளிநாட்டு நீதிபதிகளை மட்டும் சேர்த்துக் கொள்வதன் மூலம் மட்டும் பொறுப்புக்கூறல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதனை இது வெளிக்காட்டி நின்றது.ஆயினும், ஐ.நா மனித உரிமை சபையின் 30/1  தீர்மானத்தின் மூலம் பொறுப்புக்கூறலிற்காக (இலங்கை அரசினால்) ஒத்துக்கொள்ளப்பட்ட ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்து கூட தற்போது இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக முழுமையாக விலகியுள்ளது. 

தாமே இணை அனுசரணையாளர்களாக இருந்து நிறைவேற்றிய, ஐ.நா மனித உரிமை சபையின் 30/1  தீர்மானம், குறிப்பாக நிறைவேற்றுப்பந்தி 6 இல் குறிக்கப்பட்ட கடப்பாடுகள் (வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கடப்பாடுகள்), எந்த வகையிலும் தம்மை கட்டுப்படுத்தாது என இலங்கை அரசு, இந்த் தீர்மானம்நிறைவேற்றப்பட்ட  மறு நாளிலிருந்தே தொடர்ச்சியாக பல தடவைகள் எண்ணத்திலும்செயற்பாட்டிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

இந்த கடப்பாடுகள் தம்மைக் கட்டுப்படுத்த மாட்டாதவை என காட்டும் செயற்பாடுகளுக்கு இலங்கை அரச தலைவர் அவர்களே தலைமை தாங்குகிறார். மிகக் குறைந்தளவான கலப்பு பொறிமுறையை பரிந்துரை செய்திருந்த இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கையை நேரடியாகப்பெற்றுக் கொள்வதைக் கூட இலங்கை அரச தலைவரும், தலைமை அமைச்சரும் தவிர்த்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. 

எனவே ஐ.நா மனித உரிமை சபையின் கூட்டத்தொடரில், 28.02.17 அன்று உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் திரு மங்கள சமரவீரவின் உரையானது, வெற்று வார்த்தைகளால் புனையப்பட்டதும், இலங்கை அரசு உண்மையான நிலைப்பாட்டுடன் எந்தவித தொடர்பற்றதென்பதோடு, அடிப்படையில் அனைவரையும் பிழையாக வழிநடத்துகின்ற ஒன்றாகும்.

இலங்கை அரசானது, 30/1 தீர்மானத்தின் 06ம்  செயற்பாட்டு பந்தியில்குறிப்பிடப்பட்டவற்றை மட்டுமல்லாது, அத் தீர்மானத்திலிலுள்ள வேறு பல கடப்பாடுகளையும்நிறைவேற்றத் தவறியுள்ளது. உதாரணமாக,

1) கணிசமான எண்ணிகையான அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட சிலர் கூட, இலங்கை ஆயுதப் படைகளால்நிர்வகிக்கப்படும், ஈவிரக்கமற்ற சித்திரவதைகளுடன் கூடிய மனிதத்துவமற்ற தரம்தாழ்த்தும் கொடூரமான ‘புனர்வாழ்வு’ முகாம்களுக்கென அனுப்பப்படுகின்றனர்.இவற்றிலிருந்தெல்லாம் விடுவிக்கப்பட்டவர்களும் கூட கடுமையான கண்காணிப்பு மற்றும்தொடர்ச்சியான தொந்தரவுகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

2) இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 1/5 நிலங்கள் கூட இன்னும்விடுவிக்கப்படவில்லை. சில காணிகள் (ஆக்கிரமிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும், அப்பகுதியிலிருந்த இராணுவம், அருகிலிருக்கும் நிலப்பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதே தவிர, இராணுவமயாமக்கலை நீக்கி, முழுமையான
ம மீள்குடியமர்வுக்கான ஒரு சூழலை உருவாக்கவில்லை. 

இராணுவ நீக்கம் இல்லாத காணி விடுவிப்புகள், இயல்புநிலை உருவாக்கத்துக்கு முட்டுக் கட்டையாகவே தொடர்நது இருக்கின்றன. இதைவிட, பெருமளவிலான நிலப்பகுதிகள் தற்போதும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதோடு, வெவ்வேறு முகமூடிகளோடு, தற்போதைய அரசின் கீழும் இலங்கை இராணுவத்தால் காணி அபகரிப்பு தொடர்கிறது. வடக்கு கிழக்கில்இராணுவக் குறைப்பு செய்யப்படவில்லை என இலங்கை அரசு  தானே ஒத்துக்கொண்டு அறிவித்துமுள்ளது.

3) காணாமல் போனோருக்கான அலுவலகம், தனது அடிப்படையில் பிழையான நடைமுறைகளுடனேனும், நடைமுறைச்செயற்பாட்டிற்கு வராது, இன்னமும்எழுத்துவடிவிலேயே இருக்கிறது.

4) வடக்கு கிழக்கு மக்களின் பொது வாழ்க்கை மீதான இராணுவ மற்றும் பொலிஸ்கண்காணிப்பு, இந்த அரசிலும் தொடர்கிறது ஆதலால், தற்போதைய ‘இயல்புநிலை’ எனும் தோற்றப்பாட்டை பயன்படுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்செயற்பாட்டாளர்கள், தற்போதைய சூழ்நிலை எதிர்காலத்தில் மோசமடையும் பட்சத்தில்,அரசாங்கத்தினால் தாம் இலக்கு வைக்கப்படக்கூடும் என அஞ்சுகின்றனர். 2001-2004சமாதான செயன்முறைகள் குலைவடைந்த போதும் செயற்பாட்டாளார்கள் இவ்வாறாகவே
குறி வைத்துக் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசு ‘உண்மையைக் கண்டறிதலை’ முன்னிறுத்தி குற்றவியல் நீதியை, அல்லதுநீதியை புறந்தள்ள முயற்சிப்பது தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். ஆனால்இப்போது இவை இரண்டையுமே பின்தள்ளி அரசமைப்பாக்கத்தை முன்னிறுத்தி நீதி,உண்மையைக் கண்டறிதல் ஆகிய இரண்டையும் பிற்போட வேண்டும் என அரசுகூறுகின்றது. புதிய அரச அமைப்பு உருவாக்க செயன்முறையை முன்னிறுத்தி உண்மையையும்,நீதியையும், பொறுப்புக்கூறலையும் புறந்தள்ளுதல் காலத்தை இழுத்தடிக்கும் செயலாக நாம்கருதுகிறோம். 

நீதியும் சமாதானமும் (நிரந்தரத் தீர்வும்), இருவேறான தூண்கள் அல்ல. அவைஇரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டது. சமாதானத்தை முன்னிறுத்தி நீதியை புறந்தள்ளல்அரச அமைப்பாக்க முயற்சியின் நேர்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது.சமாதானத்தையும், நீதியையும் இரு துருவங்களாக அரசு அணுகுவது அபாயகரமானதும்இவ்விரண்டிலும் அரசிற்கு அரசியல் விருப்பமில்லை என்பதனை வெளிப்படுத்திநிற்கின்றது. எது எவ்வாறாயிருப்பினும் அரச அமைப்பு முயற்சிகளில் பெரிதளவில்
முன்னேற்றங்கள் இல்லை என்பதே உண்மை. 

அரச அமைப்பாக்க சபையின் வழிகாட்டும் குழு தன்னுடைய இடைக்கால அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இவ்வறிக்கையை அரசுடன் ஓர் பகுதியினரே தடுத்து வைத்துள்ளனர். இது புதிய அரசியல் திட்ட செயன்முறையில் இடையூறு ஏற்பட்டுவிட்டதை சுட்டி நிற்கின்றது. புதிய அரச அமைப்புத் திட்டம் தொடர்பிலான உரையாடல் இலங்கையின் ஒற்றையாட்சி முறையை கேள்விக்குட்படுத்தவில்லை.

முன்னரைப் போல சிங்கள- பொளத்த மேலாதிக்கவாதம் தொடர்ந்தும் பேணப்படும் என்று பொதுவெளியில் தெற்கின் அரசியல்வாதிகள் உறுதிப்படுத்துகிறார்கள். தமிழ் மக்கள் மீது புதியஅரசியல் திட்டம் எனும் வெற்று வெறிதான நம்பிக்கைக்குப் பதிலாக பொறுப்புக்கூறலை கைவிடுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. இறுதியில் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் ;இல்லை எனும் நிலைப்பாட்டிற்கே இது இட்டுச் செல்லும். ஐ.நா மனித உரிமை சபையில் கொண்டுவரப்பட்ட த  தீர்மானம் 30ஃ1 என்பது இலங்கைவின் மீதான சர்வதேச சமூகத்தின் பார்வையை திசை திருப்புவதற்காக என்பது மேற்சொன்னவற்றில் இருந்து தெளிவாகின்றது. 

கடுமையான நடவடிக்கையில் இருந்து இலங்கையை பாதுகாத்துக்கொள்வதற்கே இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தற்போது சிரேஸ்ட அமைச்சர்கள்விளக்கம் கொடுக்கின்றனர். எனவே அரசசைப் பொறுத்த வரை மனித உரிமைப் சபைத்தீர்மானம்  அவர்களின் சாணக்கியமான வெளியுறவு கொள்கை உத்தியின் ஓர் அங்கமே அன்றிவேறொன்றுமில்லை.

ஐ.நா மனித உரிமை சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 30ஃ1க்கு பின்னரான இலங்கைஅரசின் நடவடிக்கைகள் ஐ.நா மனித உரிமை சபையின் நம்பகத் தன்மையைகேள்விக்குட்படுத்துகின்றது. கலப்பு நீதிமன்ற முறை இலங்கைவின் இறையாண்மையைபாதிக்குமென்று கூறி இலங்கை அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றாது தட்டிக்கழித்துவந்திருக்கின்றது என்பது ஐ.நா செயன்முறையோடு நாம் ஒத்துழைத்துப் போக விரும்புகிறோம்என்ற அரசின் பொய்யான வேடத்தை அம்பலப்படுத்துகின்றது. 

அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில், எவ்வளவு தூரம் தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதை கணிக்கவேண்டிய கடப்பாடு ஐ.நா மனித உரிமை சபைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் உண்டு.

தமிழ் மக்களின் கணிப்பின்படி இலங்கை அரசு பாதிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்து செயற்படஅரசியல் விருப்பற்று அதே நேரத்தில் சர்வதேச தளத்தில் அவ்வரசியல் விருப்பு உள்ளதுபோல் காட்டிக்கொள்ள முயல்கின்றது. மீண்டும் அதே தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கைஅரசிற்கு நேர அவகாசம் வழங்கக் கொண்டு வரப்படும்  தீர்மானமானது ஏமாற்றுத்தன்மையானது. ஐ.நா மனித உரிமை சபையில் கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன் என ஓர் அரசு தெளிவாக சொல்லுமிடத்து அவர்களுக்கு அதே தீர்மானத்தைநிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா உரிமை சபையின் நம்பகத் தன்மையைகேள்விக்குட்படுத்தும்.

 அவ்வாறு கால அவாசகம் வழங்குதல் நீதிக்கான தேடலை நீா்த்துப்போகச் செய்யும். வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுயாதீனமான சர்வதேசவிசாரணையை வலுயுறுத்தி வந்துள்ளனர், தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இலங்கை அரசுகலப்பு ந நீதிமன்ற முறையை நிராகரித்தமையானது உள்நாட ்டில் தமிழ் மக்களுக்கு நீதிகிடைப்பதை இன்னும் சாத்தியமற்றதாக்கின்றது. தமிழ் மக்களுக்கு உண்மையான நீதிகிடைக்கவேண்டுமெனில் இலங்கை அரசு இழைத்த பாரிய குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கதனியான பன்னாட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.

அல்லது பன்னாட்டு  குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும். இது தொடர்பில் முன்னெடுப்புக்களை முடுக்கி விடுதல் ஐ.நா அமைப்பின் கடமையாகும். அதுவரைக்கும் ஐ.நா மனித உரிமை மீறல்களை கண்காணிக்க மனித உரிமை செயலாளர் நாயகம் அவர்களின் அலுவலகங்கள் வடக்குகிழக்கில் உருவாக்குதல் அவசியமாகின்றது. இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற அதன் மீது கடுமையான அழுத்தமே
இன்றைய தேவை. 

அழுத்தத்தைக் குறைப்பது அரசு தனது வாக்குறுதிகளைத் தொடர்நது செயலிழக்க வைக்க ஊக்குவிக்கும். அவ்வாறான நேர்மையான சர்வதேச அழுத்தம் தான் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான உரிமை மீறலைக் குறைப்பதற்கு சர்வதேச சமூகம் எடுக்கக் கூடிய குறைந்த பட்ச நடவடிக்கையாகும். இக்கோரிக்கை சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பில், இங்கு நிலவும் மனித உரிமை சூழல் தொடர்பான அரசியல் கணிப்பிற்கு முரண்பட்டதாக இருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் அனுபவ வாயிலாக கண்டுகொண்ட, நாளாந்தம் அனுபவிக்கும் யதார்த்தத்தையே நாம் இவ் விண்ணப்பத்தில் வெளிப்படுத்துகின்றோம். 

இலங்கை அரசு ஒருபோதும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நம்பகத்தன்மையான பொறிமுறைகளை வழங்காது என்பது மீண்டும் உறுதியாகியுள்ள நிலையில்தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதாயின் இவ் விண்ணப்பத்தில் சொல்லப்பட்டுள்ளவையேதீர்வாகும் என நாம் கருதுகிறோம்

ad

ad