புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2019

நட்டாங்கண்டல் - அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்

பனங்காமம் நட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.

NP-JF 9739 என்ற இலக்கத்தை உடைய தனியார் பேரூந்து காலை 07.00 மணியளவில் நட்டாங்கண்டலிலிருந்து ஆரம்பித்து துணுக்காய்-கோட்டைகட்டி ஊடாக அக்கராயன் சந்தியை காலை 09.15 க்கு வந்தடைந்து ,ஸ்கந்தபுரம் - முட்க்கொம்பன் வழியாக பூநகரி - சங்குப்பிடி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என்று முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.

பின்பு யாழில் இருந்து மதியம் 12.15 க்கு அதே வழியூடாக முட்க்கொம்பன்-அக்கராயன் துணுக்காய் ஊடாக நட்டாங்கண்டலை வந்தடையும் என்றும் அறிவித்துள்ளது

ad

ad