புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2019

போட்டியில் இருந்து விலகும் மைத்திரி?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கட்சிக்கும், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் அதிபர் தேர்தல் விடயத்தில் கௌரவமான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, கட்சிக்கும், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் அதிபர் தேர்தல் விடயத்தில் கௌரவமான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அத்துடன், மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகிக் கொள்ளக் கூடும் என்றும், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஐதேக முன்னிறுத்தப் போகும் வேட்பாளருக்கும், மகிந்த ராஜபக்சவினால் பெரும்பாலும் களத்தில் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் கோத்தாபய ராஜபக்சவுக்கும் நேரடிப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad