புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2019

சிங்கள இராஜ்ஜியத்தை உருவாக்க பொது பலசேனா மாநாட்டில் தீர்மானம்!

பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என பொதுபல சேனா கண்டியில் நேற்று நடத்திய மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என பொதுபல சேனா கண்டியில் நேற்று நடத்திய மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அடிப்படைவாத கல்வியை போதிக்கும் அனைத்து கல்வி நிலையங்களையும் காலதமின்று அரசு தடைச்செய்ய வேண்டும் எனவும், சிங்கள இராச்சியம் உருவாக்க பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் இங்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

01. சிங்கள இராச்சியம் உருவாக்க பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

02. ஒரு நாடு, ஒரு இனம், ஒரே நீதி

03. பௌத்த மத பாதுகாப்பு மற்றும் எழுச்சி பெறல்.

04. தேசிய பாதுகாப்பு

05. தேசிய உரிமை பாதுகாப்பு

06.நிலையான பொருளாதாரம்.

07. தேசபற்றினை கொண்ட கல்வி

08.வீடமைப்பு , உட்கட்டமைப்பு வசதிகள், சனத்தொகை மதிப்பீட்டு முகாமைத்துவம்

09 சுகாதாரம் மற்றும் போசனை.



ad

ad