சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம்- மட்டு. மாநகர முதல்வரிடம் விசாரணை! [Saturday 2025-08-09 07:00] |
![]() மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் சிஜடி யினர் விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர் |
-
9 ஆக., 2025
கிருமித் தொற்றினால் மாணவி மரணம்! [Saturday 2025-08-09 07:00] |
![]() யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். |
தமிழரசுக் கட்சியை சந்திக்கத் தயார்! [Saturday 2025-08-09 07:00] |
![]() வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழரசுக்கட்சியிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. |
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அரியநேத்திரன் கடிதம்! [Saturday 2025-08-09 07:00] |
![]() இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார |
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் நல்லூருக்கு படையெடுத்துள்ள திருடர்கள்! [Friday 2025-08-08 17:00] |
![]() நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர் |
பொரளை துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி, மூவர் ஆபத்தான நிலையில்! [Friday 2025-08-08 17:00]
மார்க்கம் இடைத்தேர்தலில் களமிறங்குகிறார் கிள்ளி செல்லையா! [Friday 2025-08-08 17:00] |
![]() கனடா- மார்க்கம் 7 ஆவது வட்டார இடைத் தேர்தலில் கிள்ளிவளவன் செல்லையா வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அவரது பிரச்சார நடவடிக்கைகளுக்கான தேர்தல் பணிமனை மார்க்கம் பகுதியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரச்சார ஆரம்ப நிகழ்வு பல மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது |
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை! [Friday 2025-08-08 17:00] |
![]() தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். |
மன்னார் காற்றாலை மின் திட்டத்தை இடைநிறுத்த முடிவு! [Friday 2025-08-08 17:00] |
![]() மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. |