வடமராட்சி - துன்னாலைப் பகுதியில் சுமார் 70 பவுண் நகைகளும், 10 லட்சம் ரூபா பணமும், கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருந்த புலம்பெயர் உறவினர்கள், துன்னாலையில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளையர்கள் வீட்டிலுள் இறங்கியுள்னர். வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்து மயக்கியே கொள்ளையடித்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்கள், மற்றும் சோக்கோ பொலிஸாரின் உதவியுடன் பருத்தித்துறைப் பொலிஸார் விரைந்தனர். அவர்கள் அங்கு விசாரணைகளில் ஈடுபட்டனர். கைரேகை அடையாளங்களைப் பதிவு செய்வதற்கு முயன்றனர். எனினும் கொள்ளையர்கள் கையுறையைப் பயன்படுத்தியே மின்குமிழ்களைக் கழற்றியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது