புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2013

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் இன்று 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை தொகுதிக்குட்பட்ட வேலணை, புங்குடுதீவு பகுதிகளுக்கு விஜயம் செய்து தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு தனது நன்றியினைத்தெரிவித்துக்கொண்டதுடன், மக்களின் தேவைகள்,பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார். மாகாணசபை உறுப்பினருடன் வலி.தெற்கு பிரதேசசபை தலைவர் தி.பிரகாஷ், வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சி.ஹரிகரன், இலங்கைத்தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணிச்செயலாளர் ப.தர்சானந் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஐரோப்பிய பயணத்தில் அனந்தி!
சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான குழுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார்....
கொழும்பில் -மேல்மாகாணத்தில்- பலமான அரசியல் சக்தியாக நாங்கள் உங்களுக்கு துணையிருப்போம்!
நாம் வாழும் கொழும்பில் எம் உரிமைக்கு குரல் கொடுப்போம்!
எங்கள் வடக்கு, கிழக்கு, மலையக உறவுக்கு கரங்கொடுப்போம்!
(நமது கட்சியின் மாகாணசபை-மாநகரசபை உறுப்பினர்களுடன் வடக்கு முதல்வரை சந்தித்த போது - 05/12/13)




               மிழ்நாடு முழுவதும் டிச.02-ம் தேதி முதல் அடுத்த மாதம் 26-ம் தேதி வரை "இல்லம் தோறும் தாமரை, உள்ளம் தோறும் மோடி' என்கிற பிரச்சார யாத்திரையை பா.ஜ.க. நடத்து கிறது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான மோடியின் அருமை பெருமைகளை விளக்கும் இந்த யாத்திரையின் உச்சகட்டமாக நரேந்திர மோடியின் செல்போன் எண்ணை கிராமத்தில் உள்ள விவசாயியிடம் கொடுத்து நேரடியாக மோடியுடன் பேச வைக்கின்றனர்.

           ""ஹலோ தலைவரே... அ.தி.மு.க பொதுக்குழு, தி.மு.க பொதுக் குழுன்னு எம்.பி. தேர்தலுக்கான ஹீட் அதிகமாகிக்கொண்டே இருக்குது.''


         சின்னஞ்சிறுசுகளுக்கே சர்வசாதாரணமாக சர்க்கரை நோய் எனும் காலத்தில், நோய் நொடி எதுவுமின்றி 100 வயதை நெருங்கிவர... உற்சாகமாக நடைபோட்டு வருகிறார்கள், நெல்லை கிராமங்களில்.

8 டிச., 2013

யாழ் ஈபிடிபி தலைமையகத்தில் கைத்துப்பாக்கியா? நாட்டின் ஜனநாயகம்: சபையில் அரியநேத்திரன் காட்டம்
நாட்டின் ஜனநாயகம் இன்று கைத்துப்பாக்கியாகிவிட்டதுடன், யாழில் ஈபிடிபி அரசியற் கட்சி காரியாலயத்தில் கைத்துப்பாக்கி என்பதுடன் யுத்தமில்லாத காலத்தில் 500 பேர் கொலை என்றால் நாட்டில் நடப்பது என்ன என்று சபையில் அரியநேத்திரன் பா.உ காட்டம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஆரம்பமாகியது: அனைத்துலக பிரமுகர்கள் பங்கெடுப்பு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை காலத்திற்கான முதலாம் அரசவை அமெரிக்கா நியூ ஜெர்சி நகரில் கடந்த 6ம் திகதி கூடியது.
ஆம் ஆத்மியின் சாதனை ஆச்சரியப்படுத்துகிறது: பெரிய கட்சிகளுக்கு எச்சரிக்கை: காங்கிரஸ் கருத்து
முதன் முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 

மோடி அலையே வெற்றிக்கு காரணம்: வசுந்தரா ராஜே

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி, சட்டீஸ்கர் உட்பட நான்கு மாநிலங்களில் பாஜக அமோ வெற்றி பெற்றதற்கு மோடியின் அலையே காரணம் என்று ராஜஸ்தான் பாஜக தலைவரும் அங்கு முதல்வராக  பொறுப்பேற்க விருக்கும் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றததையடுதது பாஜகவினர் பட்டாசுவெடித்து கொண்டாடிவருகின்றனர்,
ராஜஸ்தானில்(199) பாஜக 128இடங்களில் வெற்றி 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18இடங்களில்வெற்றி பெற்று 7இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 7இடங்களில் வெற்றி பெற்று 8 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
தில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.முதல்வர் ஷீலா தீட்சத் உள்பட பலர் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், தங்களது கட்சி ஒருபோதும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்காது என்று கூறியுள்ளார்.
சட்டீஸ்கரில் பாஜக 19இடங்களில் வெற்றி 25இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில்வெற்றி பெற்று24 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
டெல்லி: 21 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
 


டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. பாஜக, ஆம் அத்மி கட்சி முன்னிலை பெற்றிருந்தது. 
மத்தியப்பிரதேசத்தில் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!
மத்தியப்பிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அக்கட்சியின் தொண்டர்கள் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வீட்டின் முன்பு திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். 
மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 116 இடங்களை கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில், பாஜக 157 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2005 மற்றும் 2009 சட்டமன்ற தேர்தல்களில் ஆட்சியை பிடித்த பாஜக தற்போது 2013 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கிறது. 
ஏற்காடு: 78 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி
 


சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எ

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக: முதல் அமைச்சராக பதவியேற்கிறார் வசுந்தரா ராஜே சிந்தியா
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை வகித்தது.

199 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் 109 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 57 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்று, 11 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பாஜக பிடிப்பது உறுதியானது.
டெல்லி: 24 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை
டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் பாஜக 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மத்தியப்பிரதேசம்: பாஜக 103 தொகுதிகளில் முன்னிலை
மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 103 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளார். 
ராஜஸ்தான்: 119 தொகுதிகளில் பாஜக முன்னிலை
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

4 மாநிலத் தேர்தல் முடிவுகள்: அனைத்திலும் பாஜக முன்னிலை

4 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை துவங்கியது.
இதில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காலை 10.15 நிலவரப்படி,
சட்டீஸ்கர் : மொத்தம் (75/90)
ஏற்காடு சட்டமன்ற தொகுதி 5வது சுற்று முடிவு: அதிமுக 29,106: திமுக 15,394

ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் 5வது சுற்று முடிவில் அதிமுக 29,106 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 15,394 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்
1) பி.சரோஜா - அதிமுக.
2) மாறன் - திமுக.
3 )பழனி - சுயேட்சை
4) எம்.பழனிசாமி - சுயே
5) கே.பழனிவேல் - சுயே
6) கே.பூபாலன் - சுயே
7) ஈ.பொன்னுசாமி - சுயே.
8) சி.மணிகண்டன் - சுயே
9) கே.மதியழகன் - சுயே
10) ஏ.ராஜாக்கண்ணு - சுயே.
11) ஏ.ராஜேந்திரன் - சுயே.
12) நோட்டா (மேலே உள்ள யாவருக்கும் இல்லை)
மொத்தம் பதிவான வாக்குகள் 2,14,434
ஆண்கள் 1,05,610
பெண்கள் 1,08,820
திருநங்கைகள் 4
ஏற்காடு: 21.336 வாக்குகளில் அதிமுக முன்னிலை
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் 4வது சுற்று முடிவில் அதிமுக 21336 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 11788 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 9 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது. 
ஏற்காடு தொகுதியில் இதுவரை 912 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்
டெல்லியில் தொடர்ச்சியாக 3 முறை ஆட்சி புரிந்த ஷீலா தீட்சித் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்
டெல்லி மாநிலத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சி புரிந்த முதல்வர் ஷீலா தீட்சித் இம்முறை கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார். அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் கணக்குக
மத்தியப்பிரதேசம்: 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை
230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 தொகுதிளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 4 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளன.
ஷீலா தீட்சித்தை பின்னுக்குத் தள்ளிய கேஜ்ரிவால்

டில்லி சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் உள்ளார். டில்லி சட்டப் பேரவைத் தொகுதியில், சற்று முன்னர் வரை ஷீலா தீட்சித் முன்னிலை பெற்றிருந்தார். பின்னர் அவரைப் பின்னுக்குத் தள்ளி அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை  பெற்றுள்ளார்.

ராஜஸ்தான்: பாஜக 76 தொகுதிகளில் முன்னிலை
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி பாஜக 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுயில் முன்னிலையில் உள்ளது.
சத்தீஸ்கர்: பாஜக, காங்கிரஸ் 3 தொகுதிகளில் முன்னிலை
சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
ஏற்காடு: 14,951 வாக்குகள் பெற்று அதிமுக முன்னிலை
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில 3வது சுற்று முடிவில் அதிமுக 14951 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 8563 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

7 டிச., 2013

விடுதலைப் புலிகளை கட்டியெழுப்ப முயற்சி!: 17 தமிழ் அரசியல்வாதிகள் மீது பாயும் பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழ் அரசியல்வாதிகள் 17 பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பிக்கு ஒருவர் பெண்ணுடன் தொடர்பு: சிக்க வைக்க சிஹல ராவய அமைப்பு நடவடிக்கை
கொழும்பில் புறநகர் பகுதியான மாலபே பிரதேசத்தில் பெண்ணொருடன் தொடர்புகளை கொண்டுள்ள, விகாரை ஒன்றின் பிக்குவை சிக்க வைக்கும் நடவடிக்கையை சிஹல ராவய அமைப்பினர் ஆரம்பித்துள்ளனர்.
சுவிஸ் ராகம் கரோக்கே  வழங்கும் இந்த ஆண்டின் இன்னிசை மாலை 

ஆண்டு தோறும் இறுதி காலப் பகுதியில் அனைத்து கலைஞர்களையும் ஒருங்கிணைத்து நடாத்தும் சுவிஸ் ராகம் கரோக்கே இசைக்குழுவின் இன்னிசைமழை எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 4 மணிக்கு
பொன்சேகா அரசாங்கத்துடன் இணையவுள்ளார்: அவருக்கு மீண்டும் குடியுரிமை?
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவை அரசாங்கத்துடன் இணைத்து கொள்வதற்கான முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புறக்கோட்டையில் தீ! 50 கடைகள் எரிந்து சாம்பராகின! பலகோடி ரூபா சொத்துக்கள் நாசம்!
கொழும்பு - புறக்­கோட்டை போதி­ராஜ மாவத்­தையின் அரச மரத்­த­டிக்கு அருகில் அமை­யப்­பெற்­றுள்ள விகா­ரைக்கு பின்­பு­ற­மாக அமைந்­தி­ருந்த (அங்­காடி) பல்­பொருள் விற்­பனை சந்தைக் கடைத் தொகுதி நேற்று வெள்­ளிக்­கி­ழமை மாலை முற்­றாக எரிந்து சாம்­ப­ரானது.
2009க்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற கொலைகளுடன் கமலுக்கு தொடர்பு உள்ளதா? பொலிஸார் ஆய்வு
2009 ம் ஆண்டுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற படுகொலைகளுடன் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி பயங்கரவாத மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை முன்னெடுக்கக் கூடும் என்று காங்கேசன்துறைப்
தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு
பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா வில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் மகாநாடு மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய

புலிகளின் தலைவர் பற்றி சிதம்பரத்தின் உள்ளக ரகசியம் அம்பலம்..

சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால்,
விதிமீறல் புகார்: ஜெ.,வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் விதிமுறைகளை மீறிய தாக புகார் எழுந்தது. தேர்தல் நடத்தை விதியை மீறி ஏற்காடு தொகுதிக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்ததாக
உள்துறை அமைச்சரிடம் வைகோ கோரிக்கை
கொளத்தூர் மணி மீதான தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சிரஞ்சீவி
 மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சிரஞ்சீவி ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பியுள்ளார். தெலுங்கானா மாநிலம் அமைப்பதை கண்டித்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தனது ராஜினாமா பற்றி ராஜ்யசபாவில் அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது.
புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்படும்!- அரசாங்கம்
இலங்கை எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் தொடர்பான தகவல்களை சாட்சியங்களுடன் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மூதூர் படுகொலை தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்த முயற்சி!- இராணுவம்
ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிகழ்ச்சிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி தந்ததற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
கமலேந்திரன் வட மாகாண எதிர்க்கட்சித்தலைவர் பதவியை துறக்க வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான

6 டிச., 2013

கடன் தொல்லை! மனைவியை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவன்: யாழில் சம்பவம்
யாழ்.அரியாலை கிராமத்தில் வங்கி கடனை செலுத்துவதற்காக ஊர் மக்களிடம் பெற்ற கடனை மீளவும் செலுத்துவதற்காக மனைவியை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடரும் உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்களின் தோல்வி: அதிர்ச்சியில் மஹிந்த அரசாங்கம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளூராட்சி சபைகளில், தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளமை அரசாங்கத்திற்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத் தடையை மீறி வலி.வடக்கிற்குச் செல்வேன்! அ​ந்த மண்ணில் உயிர் பிரிவது பாக்கியம்: ​விக்னேஸ்வ​ரன் சவால்
அதிகாரத்தைப் பகிர்வதாக சர்வதேசத்திற்கு 13வது திருத்தச் சட்டத்தை காண்பித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாது விடுவதே, அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கம் போடும் முட்டுக் கட்டைகள் இதனையே காட்டுகின்றன
அமெரிக்க அதிகாரிகள் -கூட்டமைப்பு சந்திப்பு 
அமெரிக்க அரசின் வெளிவிவகரப் பிரிவைச் சேர்ந்த டேமியன் நேர்பி தலைமையிலான மூன்று சிரேஷ்டநிலை அதிகாரிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
சுவிஸ் ராகம் கரோக்கே  வழங்கும் இந்த ஆண்டின் இன்னிசை மாலை 

ஆண்டு தோறும் இறுதி காலப் பகுதியில் அனைத்து கலைஞர்களையும் ஒருங்கிணைத்து நடாத்தும் சுவிஸ் ராகம் கரோக்கே இசைக்குழுவின் இன்னிசைமழை எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 4 மணிக்கு

நெல்சனே மீண்டும் பிறந்துவா தமிழனுக்காய்!-அ .பகீரதன் 

கருப்புச் சிங்கமொன்று-இன்று
காரிருளில் ஒளியுதடா
காலமெனும் படகேறி
கைகாட்டி மறையுதடா

நெல்சனெனும் பெயர்கேட்டால்
கல்மனசும் கரையுமப்பா
வெள்ளையனின் பள்ளியிலே-அது
அவன்பெற்ற பெயரப்பா

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் - ஜமமு தலைவர் மனோ கணேசன் சந்தித்து கலந்துரையாடல் 

வட மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரனும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் கொழும்பில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சம்போ சங்கரா!
வேலைக்கு போகும் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று சொன்ன சங்கராச்சாரி யோக்கியதை தெரியுமா? காஞ்சி காம கோடி ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என பிராமணர்களால் அழைக்கப்படும் ஜெயந்திரனின் வண்டவாளங்கள், தில்லுமுல்லுகள் சங்கர ராமன் கொலை விழக்கை விசாரிக்கும் போது தெரியவந்தது. சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணையின் போது சங்கராச்சாரியின் காம லீலைகள் வெளியாயின. சங்கராச்சாரியின் பாலியல்
இன்று உதைபந்தாட்ட உலககிண்ண போட்டிக்கான குழுக்கள்  தெரிவாகவுள்ளன 
இன்றைய இந்த விழாவில் விருந்தினர்களாக பின்வரும்  முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்குபற்றுகிறார்கள் .இவர்கள் முன்னாள் உலக கிண்ணத்தை வென்றா நாடுகளின் வீரர்கள் என்ற கௌரவிப்பில் இடம் பெறுகிறார்கள்  Uruguay legend Alcides Ghiggia, Englishman Geoff Hurst, form
நெல்சன் மண்டேலா காலமானார்
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95)  ஜோஹனஸ்பெர்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அமைதியாக இறந்தார் என்று தற்போதைய ஜனாதி பதிஜேக்கப் ஸூமா அறிவித்துள்ளார்.
கமலேந்திரன் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து இடைநிறுத்தம்
நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் டானியல் றெக்சியன் (ரஐீவ்) படுகொலை சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் 60 ஆண்டுகளுக்கு பின் கடும் புயல்: லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு! தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை
பிரித்தானியாவில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சூறாவளியினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

5 டிச., 2013

    ஏற்காடு இடைத்தேர்தல்: 89.24 % வாக்குப்பதிவு

ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் 89.24 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 8 மணிக்குத் தொடங்கி,

சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில்
தமிழ் இன அழிப்பை ஆதாரப்படுத்திய சனல் 4 ஆவணப்படம் சுவிஸில்! கெலும் மக்ரேயை சந்திக்கலாம்
அரசின் போர்க்குற்றம் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பை ஐநாவிலும், உலக அரங்கிலும் ஆதாரப்படுத்திய channel 4 ஆவணப்படம் சுவிஸில் திரையிடப்படுகின்றது.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அறிய புதிய இணையத்தளம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய சகல விபரங்களும் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து விபச்சாரத் தொழில்!
மாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் மாலைதீவு யுவதிகள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பிரபல நடிகர்,ஆர்ட் டைரக்டர் சக்திராஜ் மறைந்தார்
தமிழ் திரையுலகின் பிரபல ஆர்ட் டைரக்டரும், நடிகருமான சக்திராஜ் நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமனார். அவருக்கு வயது 58.
மாகாணசபையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவுகளை மீறி செயற்பட்டமைக்கு கூட்டமைப்பு ஆட்சேபம்
கிழக்கு மாகாண சபையில் கடந்த இரண்டு நாட்களாக வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்து வரும் நிலையில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி இன்றைய தினம் சபையை நடத்தியமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்பேசம் தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு பிரதேசசபை தலைவர் கொலை! சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் நெடுந்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ். மகேந்திரராசா உத்தரவிட்டுள்ளார்.

4 டிச., 2013

சிறீதரன் எம்.பிக்கு எதிராக அம்பாறை நகரசபையில் தீர்மானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு எதிராக அம்பாறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அண்மையில் மாவீரர் தினம் தொடர்பிலும் பிரபாகரன் தொடர்பிலும் சிறீதரன் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! - இப்போது ப.சிதம்பரம் சொல்கிறார்
காங்கிரஸ் கட்சியின் காலைச்சுற்றிய பாம்பாக ஈழத்தமிழர் விவகாரம் மாற ஆரம்பித்து விட்டது. அதை அந்தக் கட்சியினரும் உணர ஆரம்பித்திருப்பதன் அடையாளம்தான் சென்னையில் ப.சிதம்பரத்தின் சிறப்புப் பேச்சு!
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரை கொலை செய்ய பணித்தது அவரது மனைவியே! விசாரணையில் அம்பலம பரபரப்பு தகவல்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் (ரஜீவ்) கொலை தொடர்பில், அவரது மனைவியும் மற்றுமொரு நபரும் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு விஜயம்
இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 45 தமிழ்ப் பெண்கள் தென் பகுதிக்கு சுற்றுலா விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
பிரபாகரனின் வீட்டை அரசு முடிந்தால் சுவீகரித்து காட்டட்டும்!- சிவாஜிலிங்கம் சவால்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காணிகள் உட்பட எந்த சொத்துக்களையும் அரசுடமையாக்க இடமளிக்க போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்
போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றம் இல்லாவிட்டால், சர்வதேச நாடுகளின் பொறுமை குறைந்து விடும்!- அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும்  சர்வதேச நாடுகளின்  வேண்டுகோள்களை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்து வருகின்ற நிலையில், இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது
புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்­ப­டு­கி­றது: சபையில் கெஹ­லிய
தமிழர் தாயகக் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை. அது தொடர்ந்­த­வண்­ணமே இருக்­கின்­றது. அந்த வகையில் புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்று அமைச் சரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹ­லிய ரம்புக்வெல நேற்று சபையில் தெரி­வித்தார்.
ஏற்காடு தேர்தல் : 67% வாக்குகள் பதிவு-எமது நிருபரின் கருத்து கணிப்பில்அ .தி.மு.க.வெற்றி பெரும் 

ஏற்காடு தொகுதியில் காலை 8 மணிக்கு தொடங்கிய் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   பிற்பகல்  02.00 மணி நிலவரப்படி 67% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை வந்த ஜெகன்மோகன் ரெட்டி ஜெயலலிதாவை சந்தித்தார்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான   ஜெகன்மோகன் ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து
ஏடி.எம். மையத்தில் பெண் அதிகாரியை வெட்டியவர் அடையாளம் தெரிந்தது
பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் அதிகாரியை மர்ம ஆசாமி அரிவாளால் வெட்டி பணம், செல்போன், கிரெடிட் கார்டுகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை

ஈ.பி.டி.பி கட்சியைச்சேர்ந்த நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியேல் றெக்‌ஷியன் (ரஜீப்) படுகொலை வழக்கில், ஈ.பி.டி.பி கட்சியைச்சேர்ந்த வடமாகாணசபை எதிர்க்கட்சித்தலைவர் க.கமலேந்திரன் (கமல்) கொழும்பில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் தானியல் றெக்சியனுடைய மனைவி மற்றும் வேலணையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
G

3 டிச., 2013

திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த வாலிபர் கைது

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள ஜங்கமசமுத்திரம் கிராமம்,  செல்வநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி, பழனி இவரது மகள் செல்வி வயது-12, (இருவர் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)
தேர்தல் விதி முறைகளை மீறவில்லை :  தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கடிதம்
ஏற்காடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது புதிய திட்டங்கள் குறித்து வாக்குறுதி அளித்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு
கோத்தபாய ராஜபக்சே இந்திய அதிகாரிகளுடன் ரகசியமாக பேசியது என்ன?
 
இலங்கையில் சமீபத்தில் காமன்வெல்த் மாநாடு நடந்தது.  அதில் கலந்துகொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார்.  போர்க்குற்றம்
புலிகளுக்கு 10 ரஷ்யர்கள் சிறப்பு கொமாண்டோ பயிற்சி அளித்தனர்!- நீதிமன்றில் முன்னாள் போராளி சாட்சியம்
தமக்கும் வேறு சிலருக்கும் பத்து ரஷ்யர்கள் சிறப்பு கொமாண்டோ பயிற்சி அளித்ததாக, அனுராதபுர விமானப்படைத் தளம் மீதான தாக்குதலில் தொடர்புடையவரென குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்வியை சந்திக்கும் பார்சிலோனா அணி

லயனல் மெஸி விளையாடாத நிலையில் பார்சிலோனா அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியைச் சந்தித்துள்ளது.லா லிகா கால்பந்தாட்ட போட்டியொன்றில் அத்திலட்டிக் பில்பஃபாவோ அணி 1 – 0
நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
மன்மோகன் சிங்கின் யாழ். வருகையை எதிர்க்கும் ஐ.தே.க: அழைப்பு உயிரோடு தான் இருக்கிறது என்கிறார் ப.சிதம்பரம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அழையா விருந்தாளியாக யாழ்ப்பாணம் வரவிருப்பதாக ஐ.தே. கட்சி வெளியிட்ட கருத்துக்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வலி.வடக்கிலிருந்து வெளியேறிய மக்களைச் சந்தித்தார் ஐ.நா விசேட பிரதிநிதி
யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி சலோகா பொயனி, வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமெரிக்காவில் கூடுகின்றது
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் முதலாவது அரசவை இவ்வாரம் கூடுகின்றது.எதிர்வரும் டிச 6ம், 7ம், 8ம் திகதிகளில் கூடுகின்ற அரசவையின் பிரதான அமர்வானது, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அமைகின்றது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக
 சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தால் பொட்டு அம்மானுடன் நெருங்கியவர் எனப்பட்ட வங்கி முகாமையாளர்  வாதத்தால் விடுதலை
புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டு அம்மானுடன் தொடர்பு உள்ளதாக பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பிரபல தனியார் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளர், சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து
ஐ.நா விசேட பிரதிநிதி யாழிற்கு விஜயம்: முதலமைச்சர் மற்றும் ஆளுனரை சந்தித்து பேச்சு- வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு விக்னேஸ்வரன் கோரிக்கை
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் நிலையை அறிந்து கொள்ள ஐநா அதிகாரி இலங்கை சென்றுள்ளார்!
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் ஒட்டுமொத்த நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி ஐந்து நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.
கொழும்பில் அரைநிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
2014 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படாததை கண்டித்து இன்று கொழும்பில் விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
ஏற்காடு இடைத்தேர்தல் : முதன் முதலில் ‘நோட்டா‘
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள்(அ.தி.மு.க.) மரணம் அடைந்ததையொட்டி, அத் தொகுதிக்கு நாளை(புதன்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில்  மாலை
நடிகை அனுராதா மீது தொழிலதிபர் பண மோசடி புகார்
வில்லாபுரம் அன்புடன் வரவேற்கிறது, புடிச்சா புளியங்கொம்பு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அனுராதா.  இவர் மீது  சென்னை வேளச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதரன்
நடிகைகள் லிசிபிரியதர்ஷன், ஸ்ரீபிரியா இருவரும் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.  செய்தியாளர்கள் இம்மனு குறித்த விவரம் கேட்டபோது,  அவர்கள் இருவரும் எதுவும் தெரிவிக்காமல் சென்றுவிட்டனர்.
ஏற்காடு இடைத்தேர்தல் : பிரசாரம் ஓய்ந்தது நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள்(அ.தி.மு.க.) மரணம் அடைந்ததையொட்டி, அத் தொகுதிக்கு நாளை(புதன்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.   நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் 
கேப்டன் டிவி நிருபர்கள் மீது அதிமுகவினர் கடும் தாக்குதல் : புகாரை வாங்க போலீஸ் அதிகாரிகள் மறுப்பு
கேப்டன் டிவி நிருபர்கள் லாவன்யா,  சதீஷ்.  இவர்கள் மீது இன்று  சென்னை மதுரவாயலில் அதிமுக பகுதி செயலாளர் தாக்குதல் நடத்தியுள்ளார்.  தாக்குதலில் பலத்த காயமுயற்ற நிருபர்கள்
என்னை பதவியிலிருந்து நீக்க, நாமல் ராஜபக்ச, வீரவன்ஸவிற்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை!- பி.பீ. ஜெயசுந்தர
நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அமைச்சர் விமல் வீரவன்ஸவிற்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை என நிதியமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் பணம் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது: ஜீ.எல்.பீரிஸ்
சொந்த நாடுகளில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக தமது இருப்பை கருதி சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை கொடுத்து வருவதாககவும் இதற்கு பதிலாக இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக அந்த நாடுகளின் மதிப்பீடு நியாயமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கம்

பெண்ணொருவரை கொலை செய்த குற்றத்திற்காக பதுளை மேல் நீதிமன்றம் தேயிலை தோட்ட கங்காணியான தமிழர் ஒருவருக்கு இன்று மரணத் தண்டனை விதித்துள்ளது.
பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தை சேர்ந்த வேலு சிவ சந்திரபோஸ் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா வருமாறு அழைப்பு
நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிந்திய செய்தி 
இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பொருளாதார தடை?

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வர இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலையில் இங்கிலாந்து ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என இங்கிலாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த சூழ்நிலையில், வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து இங்கிலாந்து பொருளாதார தடைவிதிக்கும் திட்டம் இருப்பதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியுள்ளது. இதன் மூலமாக சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதே இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய நாடுகளின் நோக்கம் எனக் கூறப்படுகிறது. 

சிங்களவர்கள் எதிர்ப்பு இதனிடையே, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கைக்கு எதிராக அங்கு நடந்து கொண்டமைக்கு அதிருப்தி தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள இலங்கை அரசின் ஆதரவு அமைப்பான ‘இங்கிலாந்து இலங்கையர் ஒன்றியம்’ என்ற அமைப்பு நேற்று மனு வழங்கியது. அதில், பிரதமர் டேவிட் கேமரூன், புலம்பெயர் புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் இங்கிலாந்தில் சிங்களவர்கள் மற்றும் புலிகளுக்கு எதிரான தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

மேலும், இங்கிலாந்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் இருவர் தனித் தனியாக கருத்துக்களை முன்வைத்து இரண்டு கடிதங்களை இணைத்துள்ளதாக தெரிகிறது.

ad

ad