புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2013

பிக்கு ஒருவர் பெண்ணுடன் தொடர்பு: சிக்க வைக்க சிஹல ராவய அமைப்பு நடவடிக்கை
கொழும்பில் புறநகர் பகுதியான மாலபே பிரதேசத்தில் பெண்ணொருடன் தொடர்புகளை கொண்டுள்ள, விகாரை ஒன்றின் பிக்குவை சிக்க வைக்கும் நடவடிக்கையை சிஹல ராவய அமைப்பினர் ஆரம்பித்துள்ளனர்.
மாலபே விகாரையின் பிக்கு பெண்ணுடன் இருக்கும் காணொளியை அங்குள்ள பிக்குமார் எடுத்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
காட்சியை பெற்றுக்கொண்டுள்ள சிஹல ராவய அமைப்பு, குறித்த பிக்கு மற்றும் பெண்ணினால் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படும் புதிய பிக்குகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளது.
சிஹல ராவய அமைப்பினர் நேற்றிரவு சம்பந்தப்பட்ட விகாரை மீது தாக்குதல் நடத்தியதுடன், பிக்குவையும் தாக்கி கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது.
எதிர்காலத்தில் இது போன்ற நடத்தையில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதிமொழி கடிதத்தை பிக்கு மற்றும் பெண்ணிடம் இருந்து சிஹல ராவய அமைப்பு பெற்றுள்ளது.

ad

ad