முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிகழ்ச்சிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி தந்ததற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்வு முடிந்ததையடுத்து இந்த மனு விசாரணைக்கு ஏற்கதக்கதல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது.