புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2013

உள்துறை அமைச்சரிடம் வைகோ கோரிக்கை
கொளத்தூர் மணி மீதான தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



இது குறித்து அவர்,  ‘’திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீது, சேலத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு அப்பட்டமான பொய்வழக்கு காவல்துறையால் போடப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
மத்திய அரசு அலுவலக வளாகத்தில் உள்ள வெற்று மைதானத்தில், ஒரு கோணிச் சாக்கு பொட்டலத்தை யாரோ ஒரு சிலர் தீ வைத்து எரித்துப் போட்டுள்ளனர். அதில் அங்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அச்சம்பவம் நடந்தபோது கொளத்தூர் மணி சென்னையில் இருந்தார். அதன் பின்னர் மறுநாள் நள்ளிரவில் கொளத்தூர் மணியை அவரது இல்லத்தில் காவல்துறையினர் கைது செய்து, பொய் வழக்குப் போட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் பிணையில் விடுதலை பெறுவார் என்று அறிந்து, தேசப் பாதுகாப்புச் சட்டத்தை அவர் மீது ஏவி, சிறைவாசத்தை நீட்டித்தனர். இது ஜெயலலிதா அரசு மேற்கொண்ட பாசிச அடக்குமுறை ஆகும். ஜனநாயகத்தின் குரல் வளையை அறுக்க முயலும் அக்கிரமம் ஆகும்.
இதுகுறித்து, மத்திய அரசின் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேயிடம் தொலைபேசியில் பேசினேன். இந்தியாவில் சமூக நீதியை, பகுத்தறிவை நிலையாட்டிய தந்தை பெரியாரின் கொள்கை வீரர்தான் கொளத்தூர் மணி. கொள்கைக்காகவும், தமிழர்கள் உரிமைக்காவும் போராடி பலமுறை சிறை சென்றவர். அவர் எந்த வன்முறையிலும் எப்போதும் ஈடுபட்டது இல்லை.


தற்போது, அண்ணா தி.மு.க. அரசு, காவல்துறையின் மூலம் கொளத்தூர் மணி மீது பொய்வழக்குப் போட்டு, தேசப் பாதுகாப்புச் சட்டத்தையும் ஏவியுள்ளது. வழக்கின் முதல் தகவல் அறிக்கையும், காவல்துறையினர் பொய்யாகப் புனைந்த வழக்கின் கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டால் உண்மை புலப்படும்.எனவே, தேசப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுகிறேன்.
 இதுகுறித்து நேரில் விளக்க மறுமலர்ச்சி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியை, உங்களைச் சந்திக்க அனுப்பி வைக்கிறேன் என்று தொலைபேசியில் கூறியதோடு, இதுகுறித்த கடிதத்தையும் உள்துறை அமைச்சருக்கு அனுப்பினேன்.
இன்று 06.12.2013 அன்று காலை 9.30 மணிக்கு, உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவை, அ.கணேசமூர்த்தியை நேரில் சந்தித்து பிரச்சினையை விளக்கமாக எடுத்துக் கூறி, கொளத்தூர் மணி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்துச் செய்ய வேண்டினார். அதற்கு உள்துறை அமைச்சர் இந்தக் கோரிக் கையை பரிசீலனை செய்து தன்னால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்வதாக உறுதி அளித்துள் ளார்’’என்று தெரிவித்துள்ளார்..

ad

ad