ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவும் சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா ஒன்பது நாட்கள் வாதிட்டார்கள். சுதாகரன், இளவரசி ஆகிய இருவரது வழக்கறிஞர் சுதந்திரம் ஆறு நாட்கள் வாதிட்டு தன் வாதத்தை நிறைவு செய்திருக்கிறார். ஜெயலலிதா தரப்பில் கம்பெனி வழக்கு மட்டும்தான் பாக்கி இருக்கிறது. மார்ச் மாதத்தில் தீர்ப்பு என்கிறது பெங்களூரு கோர்ட் வட்டாரம்.
ஜெ. தரப்பு வழக்க றிஞர்கள், சுதந்திரம், குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, திவாகர், பன்னீர்செல்வம், செல்வகுமார், பரணிகுமார், நாகராஜன், தனஞ்செயன், முத்துக்குமார், கருப்பையா, பெருமாள் மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ், கம்பெனி வழக்கு சார்பாக ஜெயக்குமார் பட்டீல், குலசேகரன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜியான குணசீலனும்,
டி.எஸ்.பியான சம்பந்தமும் ஆஜரானார்கள். இவர்கள் சார்பில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வருகிறார்.
சுவாமியைப் பற்றி தகவல் இல்லை!