தமிழின அழிப்புகள், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற அனைத்து அநீதிகளுக்கும் அனைத்துலக சுயாதீன விசாரணையை நடத்த வலியுறுத்தியும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றை வலியுறுத்தியும் தமிழீழ தாயகத்திலும் உலகெங்கும் தமிழர் வாழும் தேசங்கள் எங்கும் நீதி வேண்டி எழுகை கொண்ட கவனஈர்ப்புப் போராட்டங்கள் இன்றைய நாளில் நடைபெற்ற நிலையில் கனடிய தமிழர்களும் இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தி உள்ளார்கள். .
ரொறொன்ரோ காலநிலை அவதான நிலையம் கடும் குளிர் அபாய எச்சரிக்கை விடுத்திருந்த -30 பாகை செல்சியஸ் இலும் குறைந்த கடும் குளிர் காலநிலையிலும் கடும் குளிர் காற்றுடனான பனி பொழிந்த காலநிலயில் இவ் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது