புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2016

சுமார் 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

அத்தியாவசிய பொருட்களை  கட்டுப்பாட்டு விலையில் விற்கத் தவறிய 346 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நூகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்கு இடமான சுமார் 650 விற்பனை நிலையங்களை கடந்த 4 நாட்களாக சேதனையிட்டதாக அந்த சபையின் பிரதிப் பணிப்பாளர் சமந்தா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர, இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 10,162 விற்பனை நிலையங்கள் சிக்கியதாக  கூறிய அவர் இவ்வாறான வர்த்தக நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் ஊடாக 4 கோடி 57 இலட்சம் ரூபாய்க்கும் அதிக தொகை கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad