இந்நிலையில், நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 1.03 கோடி ரூபாய் கடனாக பெற்றிருக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எண்ணி ஏழு நாள் படம் பிரச்சினைகளால் ஆரம்பிக்கபடாமல் போக பிவிபி நிறுவனம் லிங்குசாமியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாகவும், அப்போது லிங்குசாமி காசோலையை கொடுத்ததாகவும் தெரிகிறது. ஆனால், செக்கில் பணம் இல்லாததால் லிங்குசாமி கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது. இதனால் அதிர்ச்சியடைந்த பிவிபி நிறுவனம் லிங்குசாமி மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |