-
19 நவ., 2025
காரைநகர் கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என 147 பேர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்! [Wednesday 2025-11-19 05:00]
![]() வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தும் நிலையில், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள். 147 பேர் கைச்சாத்திட்டு கையளித்த அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார் |
புலிகளை நினைவு கூர்ந்தால் சட்டநடவடிக்கை! [Wednesday 2025-11-19 05:00]
![]() நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாதிகள் நினைவு கூரப்பட்டால் அவற்றுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் |
தங்காலையில் கணவன்- மனைவி சுட்டுக்கொலை! [Wednesday 2025-11-19 05:00]
![]() தங்காலையில் நேற்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 6.55 மணியளவில் உனகுருவாவின் கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன, கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை |




