புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2014

கனடா பெண்களுக்கான கொக்கி விளையாட்டில் வெற்றி 
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெறுகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிழர்களிற்கு எதிராகப் பிரசாரம் செய்ய அனுப்பப்பட்டவர் கனடிய அரசில் வேலை?
ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது சிறீலங்கா அரசால் கனடாவிலுள்ள தமிழர்களிற்கு எதிரான பிரசாரத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலங்கைத் தூதுவராலயத்திற்கு
உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவம்: இந்திய மருத்துவர் சாதனை
உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
புக்கிகளுக்கு ரகசியமாக தகவலளித்த குருநாத் மெய்யப்பன்

ஐபிஎல் 6வது சீசனின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய விபரங்களை குருநாத் மெய்யப்பன் புக்கிகளுக்கு வழங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் 6வது சீசனின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசனின் மருமகனும், அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில் மெய்யப்பன் அணி குறித்த தகவல்களை புக்கிகளுக்கு தெரிவித்தது தெரியவந்துள்ளது, அவர் நடிகர் வின்டு தாரா சிங் மூலம் பெரிய தொகையை பெட் கட்டியுள்ளார்.
மெய்யப்பன் செல்போன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை பயன்படுத்தி வின்டுவை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள் பேசிய விவரம் விசாரணை குழுவிடம் உள்ளது.
ஒலிம்பிக்கில் சுவிஸ் பெண்கள் ஐஸ்கொக்கி அணி மூன்றாம் இடம் 

அரையிறுதியில் தொல்வியுற்ற் சுவிஸ் பெண்கள் அணி மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சுவீடனை 4-3 என்ற ரீதியில் வென்று வெண்கலப் பதக்கத்தினை கைப்பற்றி உள்ளது .2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்த சுவீடனை பலமாக போராடி எதிர்த்தாடி பின்பகுதி இரண்டாம் மூன்றாம் ஆடுகள நேரத்தில் 4 கோல்களை  அடித்து வெற்றியை தனதாக்கியது .
அடுக்கடுக்கான அபராதத்தினால் வெகுண்டெழுந்த பெற்றோர்
சுவிசில் குழந்தைகளை பள்ளி விடுமுறை விடுவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸின் சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த ஒபர்லேண்ட்
புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்க ள் கலந்து சிறபித்த கரவெட்டி பாடசாலை விளையாட்டுப் போட்டி நன்றி அதிரடி 
யாழ். கரவெட்டி, கட்டைவேலி மெதடிஸ் த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த மெய் வல்லுநர் போட்டி நேற்று (16.02.2014) ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்

பிரித்தானியாவில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று அப்பகுதிக்குச் சென்று வழங்கினர்.
210220141698கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரித்தானியாவில் கட்ந்த வாரம் கடும் மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ராஜீவ்தான் முதல் தீவிரவாதி! தமிழீழ ராணுவம் எப்படி தீவிரவாதி! ஆட்டம் கண்ட இந்திய ஊடகம்.

விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று உச்சநீதி மன்றமே சொல்லாத போது.. உங்கள் கருத்தை வட இந்திய மக்கள் மீதி திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது..
பலாலி விமான நிலையம் 
ஒலிம்பிக் பதக்கங்கள் 
1.நோர்வே   10 4 8  22
2.ரஷ்யா   9 10 7 27
3.கனடா  9 10 6  26
4.ஐக்கிய அமேரிக்கா 9 7 11  27
5.ஜெர்மனி   8 4 4  16
6.ஹோலந்து 6 7 9  22
7.சுவிட்சர்லாந்து 6 3 2  11
8.பைலோரஷ்யா 5  0 1 6
9.பிரான்ஸ்    4 4 7  15
10.போலந்து 4  0  0  4




போலி 500 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

X/25 524376என்ற இலக்கத்தையுடைய 1800 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் தற்போது புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. எனவே மேற்படி தொடர் இலக்கத்தை கொண்ட போலி நாணயத்தாள் கிடைக்கப்பெறுமாயின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் மொழியும் தாய் மொழியாகும்: வாசுதேவ

இலங்கையில் சிங்கள மொழி மாத்திரமின்றி தமிழ் மொழியும் தாய் மொழியாகும். எனவே இந்நாட்டில் இரண்டு தாய் மொழிகள் உள்ளன. அவற்றை கற்று சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு
தமிழர் தீர்மானத்தை குறைகூற எவருக்குமே இல்லை தகுதி-உதயன் 
இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு சிங்களத் தலைமைகள் மிக மலிவான அரசியல் நடத்தியதன் பயனை இப்போது அறுவடை செய்து
கொண்டிருக்கின்றன. கிடைத்த சுதந்திரத்தைச் சரியாகப்
புதைகுழிகளால் நிறையும் தமிழர் தாயகம்
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள் தமிழர் தாயகத்தில் மற்றொரு பகுதியான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்துக்கு
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இன்றும் இரண்டு 
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 28ஆவது தடவையாக இன்றைய தினம் தோண்டப்பட்டபோது இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
தீர்வு கிடைக்கும்வரை புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பாதீர்கள்;ஆஸிக்கு அன்ரனி ஜெயநாதன் வேண்டுகோள் 
தமிழர்களுக்கு நிரந்தர  தீர்வு கிடைக்கும்வரை வட மாகாண தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு கோரி அவுஸ்ரேலிய தூதுவர் றொபின் மூடிக்கு வடமாகாண பிரதிஅவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். 
யாழ்ப்பாணத்தில் மீண்டும் படைகளுக்கு காணி பறிப்பு; நுணாவிலில் சில காணிகளுக்கு சுவீகரிப்பு அறிவித்தல்கள் 
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. நுணாவிலில் இவ்வாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் 7 பேரும் அவற்றை இராணுவத்தினருக்கு

பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தேசத்தை கட்டியெழுப்ப முடியாது எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்க நாம் தயார்

‘தேசத்துக்கு மகுடம்’ தேசிய அபிவிருத்திக் கண்காட்சி ஆரம்ப வைபவத்தில் ஜனாதிபதி


பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் பல சவால்களை சந்தித்துள்ளோம். எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாட்டை இன்னும் 20 வருடங்களுக்கு ராஜபக்ஷ குடும்பமே ஆட்சி புரியும்


ராஜபக்ஷ குடும்பம் இன்னும் 20 வருடங்களுக்கு இந்த நாட்டை ஆட்சிபுரியும். ஐ. தே. க. எவ்வளவுதான் தலைகீழாக நின்றாலும் இதனை மாற்ற முடியாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாய் மூல விடைக்காக பி. ஹெரிசன் எம். பி. எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உலக இளைஞர் மாநாட்டில் பங்குபற்ற ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு அழைப்பு

அமைச்சர் டளஸ் நியூயோர்க்கில் பான்கீ மூனுடன் பேச்சு
கொழும்பில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டில் பங்குபற்ற வருமாறு ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
அழைப்பிதழுடன் நியூயோர்க் சென்றுள்ள இளைஞர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, ஐ. நா.

அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்படுமா? அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானம் வரையும் 4 நாடுகள்
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை உள்ளடக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக வலுத்துவரும் நிலையில், அமெரிக்காவுடன் கூட்டாக நான்கு நாடுகள் இணைந்து இத்தீர்மானத்தினை வரையத் தொடங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சாதனை படைத்த பீகார்
உலகிலேயே 20 கி.மீ பரப்பளவில் இலவச வைஃபை மண்டலத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது இந்தியாவின் பீகார் மாநிலம்.
இந்தியாவின் பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் தற்போது ஹைடெக் சாதனை படைத்துள்ளது.

7 பேரின் விடுதலை அறிவிப்பின் எதிரொலி: டெல்லியில் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை நேற்று சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.

கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது: ராஜீவ் காந்தியுடன் பலியானோரின் குடும்பத்தினர் கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று குண்டுவெடிப்பில் அவருடன் பலியானவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெயலலிதா நடவடிக்கையில் சட்டமீறல் இல்லை! மத்திய அரசின் மனுவுக்கு எதிராக வெற்றி கிடைக்கும்: ராம் ஜெத்மலானி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். 

ராஜபக்சவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தால் ஏற்றுக் கொள்வார்களா?- 3 பேரின் விடுதலைக்கு எதிராக அறிக்கை
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில், 7 பேரின் விடுதலைக்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

ad

ad