புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2014

புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்க ள் கலந்து சிறபித்த கரவெட்டி பாடசாலை விளையாட்டுப் போட்டி நன்றி அதிரடி 
யாழ். கரவெட்டி, கட்டைவேலி மெதடிஸ் த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த மெய் வல்லுநர் போட்டி நேற்று (16.02.2014) ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்

03
இதில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி கோட்டக்கல்வி அதிகாரி திரு. பொன்னையா அவர்கள், முகாமைக்குரு கட்டைவேலி சேகரமம் அவர்கள், அருட்திரு செ.பிரின்ஸன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பாடசாலையின் அதிபர் திரு. புஷ்பாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், கிராமப் பாடசாலை என்று இப்பாடசாலையை புறக்கணித்துவிடுதல் கூடாது.
தமது பிள்ளைகளை பெரிய பாடசாலைகளில் சேர்க்க வேண்டுமென்று நினைக்காமல் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இத்தகைய பாடசாலைகளில் சேர்ப்பதன் மூலம்தான் பாடசாலையையும் முன்னேறும், அதுபோல் மாணவர்களும் முன்னேறுவார்கள்,
மாணவர்களும் கல்வியில் சிறந்து முன்னேற வேண்டும். எங்களுடைய சமுதாயத்தின் வளர்ச்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலே தான் தங்கியிருக்கின்றது. ஏனைய எல்லா வளர்ச்சிகளைக் காட்டிலும் கல்வி வளர்ச்சி கூடினால்தான் சமுதாயம் முன்னேறும்.
மாணவர்கள் செய்ய வேண்டிய கடமை என்னவென்றால், தங்களுடைய பெற்றோர்களும், ஆசிரியர்களும், நலன் விரும்பிகளும் மகிழ்ச்சியுறும் வகையில் தங்களுடைய கல்வியிலே மிகவும் கவனம் செலுத்தி நல்ல பெறுபேறுகளைப் பெறவேண்டும் என்பதே என்றார்.
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
 

ad

ad