தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று (20-ம் தேதி) நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று (21-ம் தேதி) சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று (20-ம் தேதி) நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று (21-ம் தேதி) சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.