சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்தும்
அதிகரித்த வண்ணமுள்ளது. இதன்படி இதுவரைக்கும் 66 பேர் உயிரிழந்து உள்ளனர். கொழும்பு நகர் பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்
30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 360 குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 இலட்சத்து 19 ஆயிரம் 507 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்கள் 602 முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இதேவேளை இடம்பெயர்ந்தவர்களுக்கு உரிய வகையில் நிவாரணம் கிடைக்கப்பெறாமல் இருப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்மேலும் மண்சரிவு மற்றம் வௌ்ள அனர்த்தம் காரணமாக 3500 க்கும் மேற்பட்ட வீடு கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அத்துடன் ஒரு இலட்சம் ஏக்கர் நிலக்காணிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நில விவசாய காணிகள் நீரில் மூழ்கியுள்ளமையினால் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.ரோணு சூறாவளி காற்றுடன் தாழமுக்கம் காங்கேசந்துறையிலிருந்து 950 கிலோ மீற் றர் தூரத்தில் பயணித்துள்ளது. இதன்காரணமாக இன்னும் இரண்டு நாள்களில் காலநிலை வழமைக்கு திரும்பும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் வெள்ள நீர் வடிந்தோடாமையின் காரணமாக வெல்லம்பிட்டி, கொலன்னாவை,
பேலியகொட, தொட்டலங்க, களனி, அவிசாவளை, கடுவலை, பியகம மற்றும் வத்தளை ஆகிய பிரதேச நிலைமைகள்
பெரும் மோசமாக காணப்படுகின்றது. அத்துடன் கடுவளை களனி அதிவேக நெடுஞ்சாலை பாதைகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.
அதுமாத்திரமின்றி களனி கங்கையின் நீர்மட்டம் 7.6 அங்குலத்திலிருந்து 6 வரை குறைவடைந்துள்ளது. எனவே இன்னும் சில தினங்களில் வௌ்ளம் வடிந்தோடும் என்று மக்கள் எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.இதற்கு அப்பால் வௌ்ளம் பெருக்கெடுத்துள்ள தருவாயிலும் தமது உடைமைகளை பாதுகாக்கும் நோக்குடன் பலர் வீட்டு அருகிலேயே உள்ளளனர்.
இருந்தபோதிலும் இராணுவம் அவர்களை வெளியேற்றிய வண்ணமுள்ளனர். மேலும் குடும்பத்துடன் அனர்த்தம் ஏற்பட்டுள்ள இடங்களை பார்வையிட வருபவர்களுக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மாவட்டம்
கொழும்பு நகர் பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவில் கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளிலேயே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தின் கடுவலை , அவிசாவளை ,இரத்மலானை கோட்டே ஹோமாகமை பிரதேசங்களிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன்படி கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 827 பேர் 86 முகாம்களில் இடம்பெயர்ந்துள்ளனர்.கம்பஹா , களுத்துறை
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் களனி மல்வானை பியகம வத்தளை உள்ளிட்ட பகுதகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. இதன்படி கம்பஹா மாவட்டத்தில் 30 ஆயிரத்து 974 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களனியில் மாத்திரம் 28 ஆயிரத்து 178 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 9240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முழு நாட்டிலும் பாதிக்கபட்டுள்ள 4 இலட்சம் பேர்களில் சுமார் 3 இலட்சம் பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. ஆகவே இயற்கை சீற்றத்தினால் அதகளவிலான பாதிப்புகள் கொழும்பு , கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. இருந்தபோதிலும் உயிரிழப்புகள் குறைந்தளவிலேயே பதிவாகியுள்ளன.கேகாலை ,இரத்தினபுரிஇதேவேளை அரநாயக்க மற்றும் புளத் கொகுபிட்டிய மண்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் 36 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 144 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்காக 300 க்கும் மேற்பட்ட இராணுவ படையின் களமிறங்கியிருந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்தும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. எனினும் இடைக்கிடையில் ஏற்படுகின்ற மழை காரணமாக மீட்பு பணிகள் பெரும் இடையூறு ஏற்பட்ட வண்ணமுள்ளன. கேகாலை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5349 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் காற்று , மழை காரணமாக 2859 குடும்பங்களை சேர்ந்த 12ஆயிரத்து 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6449 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.மலையகம்கண்டி மாவட்டத்தில் கடுகண்ணாவ பிரதேத்தில் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டிருந்தது. இதனால் ஆறு பேர் மண்சரிவில் சிக்குண்டனர். அதேபோன்று தெல்தொடை, நாவலப்பிட்டிய, கலகெதர போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இருந்தபோதிலும் தற்போதைக்கு மண்சரிவு அபாயமே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.களுவானை, லிந்துலை பகுதிகளிலும் மண்சரிவு ஏற்பட்டது.
மேலும் கண்டி மாவட்டத்தில் 3795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். நுவரேலியா மாவட்டத்தில் 754 குடும்பங்களை சேரந்த 3132 பேர் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் பாதிப்பு குறைவாகவே பதிவாகியுள்ளது.
வடக்கு ,கிழக்குவடக்கு மாகாணத்தில் மாத்திரம் 11 ஆயிரத்து 301 குடும்பங்களை சேர்ந்த 37 ஆயிரத்து 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன்பிரகாரம் 5464 குடும்பங்களை சேர்ந்த 18 ஆயிரத்து 265 பேர் பாதிப்படைந்து 1163 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மாத்திரம் ஆயிரத்து 572 குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரம் பேர் வௌ்ள பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ் நகரிலேயே அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
குருநாகல் , புத்தளம்
வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திற்கே அதிகளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 8906 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரம் 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
காலநிலை அறிக்கைரோணு சூறாவளி காற்றுடன் தாழமுக்கம் கங்கேசந்துறையிலிருந்து 950 கிலோ மீற்றர் தூரத்தில் பயணித்துள்ளது. இதன்காரணமாக இன்னும் இரண்டு நாள்களில் காலநிலை வழமைக்கு திரும்பும் எனினும் தற்போதைக்கு நாட்டின் மேல் ,வடமேல் ,மத்திய மற்றும் சப்ரகமுவ பகுதிகளுக்கு மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
மேலும் கிழக்கு மாகாணத்தின் 2 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியகூறு உள்ளன. அத்துடன் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 வரை அதிகரிக்கும் வாய்ப்பு என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மத்திய ,மேல் ,சப்ரகமுவ மாகாணங்களுக்கு தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவித்துள்ளது.
பெரும் மோசமாக காணப்படுகின்றது. அத்துடன் கடுவளை களனி அதிவேக நெடுஞ்சாலை பாதைகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.
கொழும்பு நகர் பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவில் கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளிலேயே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் களனி மல்வானை பியகம வத்தளை உள்ளிட்ட பகுதகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. இதன்படி கம்பஹா மாவட்டத்தில் 30 ஆயிரத்து 974 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களனியில் மாத்திரம் 28 ஆயிரத்து 178 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 9240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கண்டி மாவட்டத்தில் 3795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். நுவரேலியா மாவட்டத்தில் 754 குடும்பங்களை சேரந்த 3132 பேர் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் பாதிப்பு குறைவாகவே பதிவாகியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்திற்கே அதிகளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 8906 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரம் 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.