புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2014

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தினருக்கு மனோகர் பாரிக்கர் உத்தரவு



பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக சரியான பதிலடியை கொடுக்க, இந்திய ராணுவத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.

காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

இதுதொடர்பாக ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் ராணுவத்திற்கு கண்டிப்பான உத்தரவை அனுப்பியுள்ளார். அதில், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் நிலைகளில் இருந்து பின்வாங்கக் கூடாது  என்று கூறியுள்ளார். 

ad

ad