புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2014

யாழில் மைத்திரிக்காக மக்கள் அணிதிரள்வு - கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்யவில்லை! யாழில் மைத்திரி


பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டம். இன்று 5 மணியளவில் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் சரத்பொன்சேகா துமிந்த திஸநாயக்க விஜயகலா மகேஸ்வரன் ராஜித சேனாரத்தின றிசாட் பதியுதின் மற்றும் பல ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இப்போது ஜனாதிபதிக்கு கோபம் வருவதை நான் ஊடகங்களில் பார்க்கிறேன். நான் ஜனாதிபதிக்கு கூறவிரும்புகிறேன். கோபம் வேண்டாம். இந்த நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை பாருங்கள் நாம் எவர் மீதும் பகைமை கொள்ள விரும்பவில்லை. எங்களை எதிரிகளாக பார்ப்பவர்களுக்கும் நாம்; அன்பு காட்டுகின்றோம். ஜனாதிபதி தனக்கு எதிராக எழுந்துள்ள மக்கள் அலையை புரிந்துகொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா இன்றைய தினம் யாழ்.சங்கிலியன் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற வடக்கிற்கான முதலாவது பிரச்சாரக் கூட்த்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் கூறியிருக்கின்றார்.
நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் வீதிகளையும் பாரிய கட்டிடங்களையும் அமைப்பதால் மக்களுடைய மனங்களில் மகிழ்ச்சி உருவாகப்போவதில்லை.
வெறுமனே துப்பாக்கிச் சத்தங்களை நிறுத்துவதனாலும் ஒற்றுமையை உருவாக்க முடியாது. மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் முடியாது. பௌத்த மதமாக இருப்பினும் இந்து மதமாக இருப்பினும் இஸ்லாமிய மதமாக இருப்பினும் கிறிஸ்த்தவ மதமாக இருப்பினும் அனைத்து மதங்களும் மனிதர்களின் மனங்களை மாற்றும் மனி தர்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்தும் வலிகளை கூறியிருக்கின்றன.
அந்தவகையிலும் மக்களுடைய பிரச்சினைகளை அறிந்துகொண்டும். நாம் மக்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்ப டுத்துவோம். பகைமையினால் எதனையும் சாதிக்க முடியாது.
இலங்கையில் 100 லட்சம் மக்கள் 3வேளை உணவில்லாமல் வாழ்கின்றார்கள். ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அந்த நாட்டிலுள்ள மக்களுடைய பசி தீர்க்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெற்றிருக்கவில்லை. இப்போது தேர்தல் காலம் என்பதனால் மக்களுடய வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்குகின்றார்கள். ஆனால் அது தேர்தல் காலத்தில் மட்டுமே. ஒரு நேர்மையான ஆட்சியாளன் இவ்வாறு நடந்து கொள்வது அல்லது செயற்படுவது முற்றிலும் முறையற்றதாகும்
இந்த ஆட்சியைபோன்று மோசடியான ஊழல்மிக்க ஆட்சி இலங்கை வரலாற்றிலேயே இல்லை. என பொது எதிரணியின் ஜனாதி பதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் நடைபெற்ற போரினால் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் ஒற்றுமையின்மை உருவாகியிருக்கின்றது.
போரின் பின்னர் இவ்வாறான ஒற்றுமையை அல்லது புரிந்துணர்வை வளர்ப்பது சாத்தியமற்றது. ஆனால் அதனை நான் உருவாக்குவேன் என்றே உங்கள் முன் கூறுகின்றேன்.
அபிவிருத்தி அழகிற்கு பின்னால் பல ஊழல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. வடக்கிற்கு புகைவண்டிச் சேவை தொடங்கப்பட்டதன் மூலமாக வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் பாலம் அமைக்கப் பட்டதாக கூறிய ஜனாதிபதி அந்த புகைவண்டிப் பாதை அமைப்பில் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் எத்தனை கோடி கமிஷன் பெற்றார் என்பதை கூறவில்லை.
அதேபோன்று பாரிய வீதிகள் அமைக்கப்படும்போதும் அதன் மதிப்பீடு என்ன என்பது வெளிப்படயாக கூறப்படுவதில்லை. மக்களுக்கு மட்டுமல்ல அமைச்சர்களுக்கும் கூட அது மறைக்கப்படுகின்றன. எனவேதான் கூறுகிறோம். இந்த ஆட்சியைப்போல் மோசமான ஊழல்மிக்க ஆட்சி இலங்கையின் வரலாற்றிலேயே இல்லை.
பல அரசியல்வாதிகள் போதைப் பொருள் விற்கின்றார்கள். பலர் பாலியல் பலாத்காரம் செய்கின்றhர்கள். பலர் கசினோ சூதாட்ட விடுதிகளை நடத்துகின்றார்கள். இன்று அவர்கள் அனைவரும் அரசாங்கத்துடன் இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
மறுபக்கம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்துடன் இணையும் கட்சிகளின் தலைவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். இந்நிலையில் பல லட்சக்கணக்கான கடிகாரங்கள் இறக்கப்படுகின்றது. பல லட்சக்கணக்கான தொலைபேசிகள் கொண் டுவரப்பட்டிருக்கின்றன.
அவற்றைக் கொடுத்து எங்கள் வாக்குகளை பறிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கும் அனைத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு மாற்றத்திற்காக வாக்களியுங்கள். நான் ஒரு அரசன் வீட்டு பிள்ளையோ பிரபு வீட்டுப் பிள்ளையோ இல்லை. சாதாரண விவசாயின் பிள்ளை. எனக்கு விவசாயிகளின் பிரச்சினை தெரியும்.
ஆனால் இந்த ஆட்சியாளர்கள் விவசாயிகள் மீது அக்கறை கொண்டிருந்தால் பழங்களும் மரக்கறிகளும் தானியங்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உள்நாட்டு உற்பத்திகள் ஊக்குவிக்கப்படும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்போவதில்லை.
மேலும் இந்த நாடு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதனை மக்கள் அறிந்திருக்கின்றார்கள். அதனாலேயே இனமத போதமில்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் மஹிந்தவுக்கு எதிராக திரும்பியிருக்கின்றார்கள். நான் அரசனாக வாழ்வதற்காக வாக்கு கேட்கவில்லை. நாட்டு மக்களின் சேவகனாக இருப்பதற்கே வாக்கு கேட்கிறேன்.
இலங்கையின் ஜனாதிபதிக்கு 7மாளிகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் கூட நான் கால் வைக்கப்போவதில்லை. நிறைவேற்று அதிகார முiறை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கி அமைச்சரவைக்கு அதிகாரங்களை வழங்கி நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கி பொலிஸாருக்கு நடுநிலமையாக செயற்பட அங்கீகாரம் வழங்கி அரச ஊழியர்களுக்கு செயற்பாட்டு சுதந்திரம் வழங்கி ஒரு நிறைவான மக்கள் விசுவாசிக்கும் ஆட்சியை உருவாக்குவேன்.
இதேபோன்று நான் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்தேன். அதேபோன்று ஜனாதிபதியும்; அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள்.
எனவே இந்த பிரச்சாரமேடையில் வெளிப்படையாக கூற விரும்புகிறேன். நான் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தத்தையும் செய்யவில்லை. அதேபோல் ஜ.தே.கட்சியுடனும் நான் ஒப்பந்தங்களை செய்யவில்லை. இது மோசமான பொய் பிரச்சாரமாகும். எதிர்காலத்திலும் இவ்வாறே பொய் பிரச்சhரங்களை செய்வார்கள். அதனை மக்கள் நம்பவேண்டாம்.
எங்களுடன் இணைந்திருப்பவர்கள் அவர்களுடைய மனச்சாட்சியின் அடிப்படையிலேயே இணைந்திருக்கின்றார்கள். என்னுடைய 49வருட அரசியல் பாதையில் பல தேர்தல்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் இப்படியொரு மக்கள் எழுச்சியை நான் கண்டதில்லை. என்னுடைய அனுபவத்தினடிப் படையில் மக்கள் எந்தப்பக்கம் திரும்புகிறார்கள் என்பதையும் நான் அறிகிறேன்.

ad

ad