புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2014

மைத்திரிபால அரசாங்கத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: சந்திரிக்கா பண்டாரநாயக்க

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முதன் முதலாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளில் நான் நேரடியாக தலையீடு செய்வேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் குடும்பத்தார் அரச நிதியை தேவையானவாறு பயன்படுத்த அனுமதிக்க முடியாது. அவ்வாறு நிதியை பயன்படுத்த அனுமதித்த நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிற்கு முதலில் தண்டனை விதிக்கப்படும்.
ஜயசுந்தரவின் நடவடிக்கைகளினால் கோடிக்கணக்கான ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்களின் பயணம் விரயமாக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad