புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2014


ஊடகத்திற்கு எதிரான யுத்தத்தை நிறுத்து!- யாழில் அணிதிரண்ட ஊடகவியலாளர்கள்
ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து கடந்த 25ம் திகதி கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ். ஊடகவியலாளர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்த படையினர் முயற்சி செய்தமை, வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், வட மாகாண சபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான அனந்தி சசிதரன்,கஜதீபன் சுகிர்தன், தமிழ் தேசிய மக்கள் முன்ணணியைச் சேர்ந்த செ.கஜேந்திரன் மற்றும் யாழ். மாநகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தினர்.

ad

ad