கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பிணை நிபந்தனைகளை முறியடித்த குற்றத்துக்காக ஜூலியன் அசாஞ் லண்டனில் அமைந்துள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் வைத்து மெற்றோபொலிற்ரன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
ஏழு வருடங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுக்காக சுவீடனுக்கு நாடு கடத்தப்படவிருந்த அசாஞ் அரசியல் தஞ்சம் கோரி ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைந்தார்.
இந்நிலையில் அசாஞ்சின் அரசியல் தஞ்சத்துக்கான கோரிக்கை ஈக்குவடோர் அரசால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தூதரகத்தால் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து அசாஞ் கைதுசெய்யப்பட்டார்.
எனது வழக்கை பின்பற்றிய முறையின் மூலமாக எவரையேனும் மதிக்காமலிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அந்த சமயங்களில் நான் மிகவும் அச்சமடைந்திருந்தேன், அதனால் எனக்கு எது சிறந்தது என தோன்றியதோ அதையே நான் செய்தேன் என அசாஞ் இன்று நீதிமன்றில் சமர்ப்பித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்துக்காக ஜூலியன் அசாஞ்-க்கு 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது