கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீச்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தமிழ் மொழி முலம் பரீட்சைக்கு தோற்றியவர்களில், வடக்கு மாகாணத்தில் பௌதீக விஞ்ஞான
துறையில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரி மாணவன் சன்முகநாதன் சஞ்சித் யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அத்தோடு அவர் தேசிய ரீதியில் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
அத்தோடு கலைப்பிரிவில் சாவகச்சேரி இந்துக்கல்லுாரி மாணவி சிங்கராசா நிலக்ஷனா முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி-முருகானந்தா கல்லுாரி மாணவி கந்தையா ஜனனி வணிகப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
