புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2020

அனலைதீவுக்கு வந்தவருக்கு கொரோனா அறிகுறி!

Jaffna Editor
பொலன்னறுவவில் இருந்து அனலைதீவுக்கு வந்த ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பொலன்னறுவவில் இருந்து அனலைதீவுக்கு வந்த ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையில், பணியாற்றுவதற்காக, பொலன்னறுவவில் இருந்து வந்தவருக்கே கொரோனா அறிகுறிகள் காணப்படுகின்றன.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த இவர் தொற்று அறிகுறிகளை அடுத்து எழுவைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இவருக்கு பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அதுதொடர்பான முடிவு இன்னமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், எழுவைதீவில் குறித்த கொரோனா தொற்று சந்தேக நபருடன் பழகியவர்களை சுய தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ad

ad