புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2021

தமிழ் தேசியம் பேசும் முன்னணி ஈ பி டி பி க்கு ஒத்துழைப்பு

www.pungudutivuswiss.com
ஈ பி டி பி யும் சுயேச்சைக்குழுவும் சேர்ந்து சபையை கைப்பற்ற உதவியாக முன்னணி நடுநிலை வகித்தது
கூட்டமைப்பின் வசமிருந்த காரைநகர் பிரதேச சபையும் ஈபிடிபி வசம் வீழ்ந்துள்ளது.

கூட்டமைப்பு சார்பு தவிசாளர் அண்மையில் மரணமடைந்த நிலையில் இன்று புதிய தவிசாளர் தெரிவிற்கான நடைபெற்றிருந்த நிலையில் சுயேட்சைக்குழுவிற்கு ஈபிடிபி ஆதரவளித்திருந்தது.

இதனையடுத்து ஜந்து வாக்குகளால் சுயேட்சைக்குழு வெற்றிபெற்றிருந்தது.

இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு மூன்று வாக்குகளை பெற்றிருந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈபிடிபி வெற்றி பெற ஏதுவாக நடுநிலை வகித்திருந்தது.

ஏற்கனவே வல்வெட்டித்துறை நகரசபையினையும் இதேபோன்றே ஈபிடிபி ஆதரவுடன் சுயேட்சைக்குழு கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad