அகதிகள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும், அவர்களுக்கு மனிதநேய விசாக்கள் வழங்குவதன் மூலம் மற்ற நாடுகளை விட சுவிட்சர்லாந்து அகதிகளுக்காக கூடுதலாக செய்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், கொள்கையளவில் அந்த ஆய்வை வரவேற்றுள்ள சுவிஸ் அகதிகள் கவுன்சில், மனிதநேய விசாக்கள் வழங்குதல் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இணைத்தல் ஆகிய விடயங்களில் சுவிட்சர்லாந்து அதிக கட்டுப்பாட்டுடன் நடப்பதால், அது எடுக்கும் நடவடிக்கைகள் செயல்திறன் மிக்கவையாக இல்லை என விமர்சித்துள்ளது. |