இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள் ஜனவரி 01 முதல், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (https://eservices.immigration.gov.lk/emb/eEmbarkation/'#/home-page) www.immigration.gov.lk ஊடாக குறித்த தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டுமென, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இவ்வசதி ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதோடு, பயணிகள் புறப்படும் அல்லது வருகை தருவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் இத்தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் தாமதங்களை தவிர்ப்பதற்காக, குறித்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.