புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2023

உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து இந்தியாவுடன் மோதப் போகிறதா?

www.pungudutivuswiss.com
இலங்கையிடம் 2007, 2011 என இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. தற்போது அதே அணியை லீக் சுற்றில் வீழ்த்திய கையோடு, நடப்புத் தொடரில் அரையிறுதி வாய்ப்பையும் ஏறத்தாழ நியூசிலாந்து அணி உறுதி செய்துள்ளது.

இலங்கைக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டத்தில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது நியூசிலாந்து அணி. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக குசால் பெரேரா 51 ரன்கள் சேர்த்திருந்தார். தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி, 23வது ஓவரிலேயே வெற்றியை வசப்படுத்தியது.

ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்ற நிலையில் 10 ஓவர்கள் வீசி 37 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய டிரெண்ட் போல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நடப்புத் தொடர் இலங்கைக்கு மிகவும் மோசமான தொடராக அமைந்திருக்கிறது. இரண்டு வெற்றி 7 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் பின்தங்கி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது இலங்கை.

மறுபுறம், நியூசிலாந்தின் இந்த வெற்றி, அரையிறுதிக்குள் நுழையும் முனைப்பில் உள்ள பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் நெருக்கடியை அளித்திருக்கிறது.

பாகிஸ்தானை தலைசுற்ற வைக்கும் இலக்கு
கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதிபட மூலாதாரம்,GETTY IMAGES
புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி இலங்கையுடனான வெற்றியைத் தொடர்ந்து 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று மொத்தம் 10 புள்ளிகளுடன் 4வது இடத்தை வகிக்கிறது. நியூசிலாந்தின் நிகர ரன்ரேட்டும் 0.398இல் இருந்து 0.743 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரேயொரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. சனிக்கிழமை இங்கிலாந்தை எதிர்த்து அந்த அணி விளையாடுகிறது. ஆனால், அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தானுக்கு வெற்றி மட்டுமே போதாது. ஏனெனில், அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.036 மட்டுமே.

ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி, இங்கிலாந்தை 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் நிகர ரன்ரேட்டில் பெரிய மாறுதலை ஏற்படுத்தி அரையிறுதிக்குள் நுழைய முடியும். ஆனால் இது நடப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ தரவுகளின்படி, இங்கிலாந்தை 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் நிகர ரன்ரேட்டில் பெரிய மாறுதலை ஏற்படுத்தி அரையிறுதிக்குள் நுழைய முடியும்.

ஒருவேளை இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் சேர்த்தால், பாகிஸ்தான் இலக்கை வெறும் 3.4 ஓவர்களில் எட்ட வேண்டும்.

அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பழிதீர்க்குமா?
கிரிக்கெட் உலகக்கோப்பை அரையிறுதிபட மூலாதாரம்,GETTY IMAGES
புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் 4வது இடத்தில் உள்ள அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15ஆம் தேதி முதல் அரையிறுதியில் களமிறங்கும். அதன்படி இந்தியா, தற்போது 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்த்துக் களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

கடந்த 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்தியதை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள்.

தொடர்ந்து 2015, 2019 என இருமுறை இறுதிப்போட்டி வரை சென்று உலகக்கோப்பையை நழுவவிட்டிருக்கிறது நியூசிலாந்து அணி. முன்னதாக நடப்புத் தொடரில் இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நடப்புத் தொடரில் தோல்வியையே சந்தித்திராத இந்திய அணி, 2019 அரையிறுதி தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

ad

ad