பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் காலம் காலமாக பேசப்படுகிறது.குருந்தூர் மலை ஒரு இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ சொந்தமானதல்ல ,ஒட்டுமொத்த மக்களுக்கும் சொந்தமானது. இந்த விவகாரத்தை ஜெருசலேம் அளவுக்கு கொண்டு செல்லாமல் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும்.மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்டு மதங்கள் செயற்பட்டால் முரண்பாடுகள் தோற்றம் பெறும். |