மேலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பாலியாறு மற்றும் பரங்கியாறு போன்ற ஆறுகளின் நீர் மட்டங்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார் -யாழ்ப்பாணம்(ஏ-32) பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் எனவே குறித்த வீதியூடாக பயணம் செய்யும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அரிவித்துள்ளது. அத்துடன் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவன் பிட்டி,பகுதியில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 161 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான உணவு இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளது. |