புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2025

வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! - குழப்ப முயன்றதால் பதற்றம். Top News [Sunday 2025-05-18 17:00]

www.pungudutivuswiss.com

    கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இன்று  காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த வெள்ளவத்தை அலெக்ஸாண்டிரா வீதி கடற்கரை பகுதியில் இன்றைய தினம் காலை முதல் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த வெள்ளவத்தை அலெக்ஸாண்டிரா வீதி கடற்கரை பகுதியில் இன்றைய தினம் காலை முதல் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்

    இதேவேளை கடந்த சில வருடங்கள் போன்று இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளை குழுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

    எனினும் இதனையும் மீறி பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் உணர்வுபூர்வமாக பங்கெடுத்தனர்.

    அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினர் பொதுமக்கள் என சமூகத்தின் பல தரப்பட்டவர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

    இலங்கையில் செயற்படும் சுதந்திர பாலஸ்தீன அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

    இரண்டுநிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான நினைவேந்தல் நினைவில் கவிதை வாசித்தல், உரைகள் போன்றவையும் நடைபெற்றது.

    நிகழ்வின் இறுதியில் நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களிற்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

       
       Bookmark and Share Seithy.com

    • Welcome

ad

ad