புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2025

செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை- மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்! [Friday 2025-07-18 07:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி  முன்வைக்கப்பட்ட பிரேரணையை மட்டக்களப்பு மாநகரசபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி முன்வைக்கப்பட்ட பிரேரணையை மட்டக்களப்பு மாநகரசபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் இரண்டாவது சபை அமர்வு வியாழக்கிழமை (17) நடைபெற்றது. இதன்போது, துரைசிங்கம் மதன் என்ற உறுப்பினர் செம்மணி புதைக்குழிக்கு சர்வதேச விசாரணை கோரி தனிநபர் பிரேரணையை முன்வைத்தார்.

இதற்கு தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் உள்ளிட்ட சபையில் இருந்த அனைவரும் ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad