புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2012


தமிழ் அரசியல் கைதி டில்ருக்சன் மரணம்! தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்
வவுனியா சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி டில்ருக்சன் நேற்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் குறித்த கட்சியினர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்படி கண்டனம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
அதில் மேலும் தெரிவிக் கப்பட்டிருப்பதாவது.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது இலங்கை அரசினது சிறைக்காவலர்களும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து கடந்த 01-07-2012 அன்று ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
அத் தாக்குல் காரணமாக கணேசன் நிமலறூபன் என்ற அரசியல் கைதி 03-07-2012 அன்று உயிரிழந்தார். இந்நிலையில் மேற்படி தாக்குதலின்போது படுகாயமடைந்து கோமா நிலையில் இருந்த டில்ருக்சன் என்ற தமிழ் அரசியல் கைதியும் நேற்று 07-08-2012 அன்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிலுள்ள சிறை ஒன்றில் குறிப்பாக நீதித்துறையின் பாதுகாப்பில் இருந்த ஓர் கைதியை விசாரணை நடாத்தி அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்காக எத்தகைய தண்டனையும் வழங்கும் அதிகாரம் அரசின் நீதித்துறைக்கு இருந்தது.
அவ்வாறு செய்யாது தனது கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரை இவ்வாறு அரசு படுகொலை செய்துள்ள செயற்பாட்டின் மூலம் ஆட்சியாளர்கள் எவ்வளவு குரூரகுணம் மிக்கவர்கள் என்பதனை இந்தக் கொலை மூலம் உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.
இலங்கை அரசு தனது பாதுகாப்பில் இருந்தவர்களை தானே தாக்கிக் காயப்படுத்தியது மட்டுமன்றி, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிசசை வழங்காகது சாகடித்துமுள்ளது.
நிமலரூபன் அவர்கள் உரிய சிகிச்சைகள் இன்றி சாகடிக்கப்பட்ட பின்னரும் கூட டில்ருக்சன் அவர்களது உயிரைக் காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது அவரை அரசு சாகடித்துள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது என்றுள்ளது.

ad

ad