புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2013

அன்புமணியின் கருத்தால் பரபரப்பு
 

பாமக செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.   இதில், மாநிலங்களவை தேர்தலில் தன் கட்சி சார்பில் உள்ள 3 எம்.எல்.ஏக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்
என்கிற முக்கிய முடிவை எடுக்க உள்ளார்கள். 

திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின், தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அன்புமணி ராமதாசை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார்.  இந்நிலையில் இன்று தர்மபுரி,சேலம் மாவட் டங் களில் சுற்றுப்பயணத்தில் உள்ள அன்புமணியிடம் கட்சி முக்கியஸ்தர்கள் இதுவரை தனித்து போட்டி என பேசி வந்த நாம், மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என தெரிவித்தால் கட்சியின் மதிப்பு குறைந்துவிடும் என்று சொல்லியுள்ளார்கள்.
அப்போது அன்புமணி, திமுகவுக்கு ஆதரவு என்ற முடிவை நாம் இதுவரை எடுக்கவில்லை.  தேர்தல் புறக் கணிப்பு செய்யப்போவதாகவே அய்யாவின் மனநிலை உள்ளது.  நாளைய செயற்குழு கூட்டத்தில் ஆலோச னைக்கு பின்னர்தான் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
அன்புமணியின் இந்த கருத்து கட்சியினரிடையே பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad