புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2013

பிரிட்டன், கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!
சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்கள்.
இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளிகள் என்று கூறும் கோஷங்களையும் அவர்கள் எழுப்பினார்கள்.
இலங்கையில் இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டை சர்வதேச நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.
இதற்கிடையே ஆட்டம் நடந்த மைதானத்திலும் இரு இளைஞர்கள் புலிக்கொடியை ஏந்தியவாறு கோசங்களை இட்டுக்கொண்டு மைதானத்துக்குள் ஓடினார்கள்.
அவர்களில் ஒருவர் விக்கெட்டுக்களுக்கு அருகே வரை ஓடிவிட்டார்.
இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது இது நடந்தது. அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, அங்கிருந்து அகற்றினார்கள்.
லண்டனில் இன்று கிரிக்கெட் மைதானத்தில் ஈழத்தமிழர்கள்  உள்ளே நுழைந்து ஆற்பாட்டம்


Sri Lanka 181/8 (50 ov)
India 182/2 (35.0 ov)
India won by 8 wickets (with 90 balls remaining)
அன்புமணியின் கருத்தால் பரபரப்பு
 

பாமக செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.   இதில், மாநிலங்களவை தேர்தலில் தன் கட்சி சார்பில் உள்ள 3 எம்.எல்.ஏக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்

மலிவு விலை காய்கறி கடைகளை
திறந்து வைத்தார் ஜெயலலிதா
அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம்
 


நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலையைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (28) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதே ஏரியாவைச் சேர்ந்த முனிஷ் (25) என்பவர் கருப்பசாமியின் நண்பர். 
Sri Lanka 92/3 (30.0 ov)
India
India won the toss and elected to field
South Africa 175 (38.4 ov)
England 179/3 (37.3 ov)
England won by 7 wickets (with 75 balls remaining)
மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு

புதுடெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர், நேற்று மாலை இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். 

ad

ad