புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2012

இலங்கைக்கு தலையிடியாக இருக்கும் இணையத்தளங்களை முடக்கும் முயற்சியில் கோத்தபாய?
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:31.04 AM GMT ]
இலங்கை அரசாங்கத்திற்கு தலைவலியாக இருக்கும் இணையத்தளங்களை தடுக்கும் முயற்சியை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாக லங்கா நியூஸ்வெப் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சில இணையத்தளங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தலையிடியாக இருப்பதாகவும் இவற்றை முடக்குவதற்காக பாதுகாப்புச் செயலரின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வெளிநாடுகளில் இருந்து செயற்படும் இணையத்தளங்களின் முகவரியை ஒத்த போலியான யுஆர்எல் (URL) முகவரிகள் உருவாக்கப்படும். இந்நிலையில், குறித்த இணையத்தளங்களைப் பார்வையிட நுழையும்போது, இந்த போலியான இணையங்களுக்குள் பார்வையாளர்களைக் கொண்டு செல்லும்.
சீன அரசின் துணையுடன் இந்தத் திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. இதற்கென பாதுகாப்பு அமைச்சு 12 சீன தொழில்நுட்பவியலாளர்களைப் பயன்படுத்தி வருகிறது.
இந்த தொழில்நுட்பவியலாளர்கள் போலியான யுஆர்எல் (URL) முகவரிகளை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

ad

ad