அது, ஒருநாளில் நடந்த திடீர் நிகழ்வல்ல என்கிறது அ.தி.மு.க. மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வட்டாரம். விரிவாக விசாரித்தோம்.
மதுரை எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையிலிருந்து சத்தியவேடு போகும் வழியில் உள்ள சீதஞ்சேரி கிராமத்தில் வாங்கிப் போட்டிருந்தார் விஜயகாந்த். சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் அவரை அழைத்த பிரேமலதா, ""நீங்கதான் எம்.எல்.ஏ. ஆயிட்டீங்கள்ல இனி நீங்க தனியா சம்பாதிச்சுக்குங்க. உங்க பெயரில் இருக்கிற சொத்தையெல்லாம் விஜயகாந்த்தின் தனிப்பட்ட உதவியாளர் பார்த்தசாரதி பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுங்க'' என கட்டளையிட்டார். ""இத்தனை வருஷம் விஜிக்கு விசுவாசமா இருந்த என்னிடம் என்ன குறை கண்டீர்கள். திடீரென இப்படி மாற்றி எழுதிக் கொடுக்கச் சொல்வதற்கு காரணம் என்ன?'' என கேட்ட சுந்தர்ராஜனை ஒருநாள் விஜயகாந்த்தின் ஆஸ்தான தொண்டர்கள் குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு ஊத்துக் கோட்டையிலுள்ள பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கு சொத்து பெயர் மாற்றம் வெற்றிகரமாக நடந்தது.
அப்பொழுது அ.தி.மு.க.வுடன் இணக்கமாக இருந்த விஜயகாந்த்தின் பிரஷரால் அந்த ரெஜிஸ்தர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த சுந்தரராஜனின் குரல் வெளியே வரவில்லை. ஆனால் அ.தி.மு.க. தலைமை இந்த சம்பவத்தை தெளிவாக குறித்து வைத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து சுந்தரராஜன், கட்சியில் ஓரம் கட்டப்பட்டார். விஜயகாந்த்துக்கும் அவருக்கும்-nakeeran ....